உலக வெப்பமுறுதலின் விளைவுகள்- 1
சூரிய வெப்பத்தை பூமிப்பந்தில் இருந்து வெளியே செல்லாது வாயு மண்டலத்தில் படலமாகப் படியும் காபனீரொக்சைட் தடுத்துவிடுவதால் சராசரி சூழல் வெப்பம் அதிகரிக்கிறது..
இதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் விரைவாக உருகி கடல்மட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக.. உலகின் தாழ்நிலப் பிரதேசங்களை கடல்காவு கொள்ளும் நிலை அதிகரிக்கும்.
இதனால் சிறீலங்கா உட்பட பல நாடுகள் பாதிப்படையும். யாழ்குடாநாட்டு, மட்டக்களப்பு போன்றவற்றுள் உவர் நீர் உட்புகும் அளவும் அதிகரிக்கும்..! இது குடாநாட்டு மண்ணின் இயல்புகளையே பாதிக்க வகை செய்யலாம்..! இதனால் குடாநாடு தரிசாவதை.. நாம் பிரித்தானியாவில் இருந்து கொண்டும் செய்கின்றோம்..கனடாவில் இருந்து கொண்டும் செய்கின்றோம் இந்தியாவில் இருந்து கொண்டும் செய்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
தகவல் யாழ்.கொம்
1 மறுமொழி:
பதிவுக்கு நன்றி.