Thursday, October 11, 2007

கணமொரு காதல் கொண்டேன்..



பனிக்குளிரில்
இதம் சேர்க்க
ஓர் இழுத்தணைப்பு..!
மெல்லத் தொட்டு
மேனி தடவி
இதழோடு இதழ் வைத்து
வெப்பமூட்டி
அவள் மூச்சில்...
என் சுகம்..!

சுவாசம் எங்கும்
அவள்
வாசனை தரிக்க
உடலோடு ஐக்கியமாகி
சொர்க்கத்தின்
வாசல் திறந்தாள்
எனக்காய் மட்டும்..!

நான்
தொட்டுத் சுகித்து
இன்புற்று
பின்...
தூக்கி எறிந்தேன்
அடுத்தவன்
உறவானாலும்
எனக்கென்ன
என்ற நினைவில்...!

பார்த்திருக்க
வீதியால் சென்றவன்
எடுத்தணைத்தான்
அவளும்
ஒட்டி உரசி
அவனோடும்...
சீ சீ...
என்ன அசிங்கம்
இதுவும் ஒரு வாழ்வா..??!
விபச்சாரி...
பட்டம் வழங்கி
நான் புனிதனானேன்..!

கண்டவன்
போனவன்
சிரித்தவன்
எடுத்தவன்
அடுத்தவன் எல்லாம்
சுகித்த பின்
தூக்கி எறிந்தனன்..
மிச்சம் மீதிக்கு
யாரோ...??!

கண்முன்னே கண்றாவி
பெண்ணொருத்தி
அவளைத் தொட்டு
தூக்கி அணைத்து
இதழோடு இதழ் வைத்து
பெண்ணும் பெண்ணும்..
உறவாட..
சீ...
என்ன உலகிது
அவள் சுகத்துக்காய்
அலைகிறதே...
குற்றமுணராத
புனிதனாய்
அவள் முன்னே
நான்
இன்னொரு புதிய கன்னியை
அணைத்தபடி...!

காலத்தின் முடிவில்
அவள்
கட்டையாய்
வீழ்ந்தாள்..!
ஆரம்பித்து வைத்தவன்
நான்...
கண்ணீர் விடக்கூட
மனதின்றி
எங்கோ ஒளிந்து கொண்டேன்
என் புனிதம் காத்திட...!

கணமொரு கன்னியர்
காசுக்கு
என் காதல் கண்டு
கரங்களில் தவழ்ந்தனர்..!
அன்புக்கு எங்கே
பெறுமதி..
கன்னிக்கும் இப்போ
உடலோடு தான் தேவை..!

ஓர் நாள்
இருமலோடு வாந்தி
இரத்தம் கலந்து வர..
சோதனைக்குச் சென்ற
என் காதில்....
"கான்சராம்
சுவாசப்பையில்..."
கதை விழுந்தது.
தொட்டதன் விளைவுதானாம்
அது...!

ஆனதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே
வரிகளோடு
மரணத்தின் வாசல்படியில்
நான்..!
தொட்டவள் தந்த வினையது..!

இறுதியில்...
சிகரட் எனும் நாமம்
கொண்டவர்
கன்னியர் உறவே
வெறுத்திடுங்கள்
புனிதராய் வாழ்ந்திடுங்கள்..
தத்துவம் பேசியே
என் மூச்சும் அடங்குகிறது..!

பயன் தான் கிட்டுமா..??!
விண்ணிருந்து பார்கின்றேன்
புகைவிடும் கதையும்
ஓர் தொடர்கதை தான்
பூமியில்...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:10 AM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

nice.

Thu Oct 11, 11:49:00 AM GMT+1  
Blogger நளாயினி செப்பியவை...

புகைப்பிடித்தலை வைத்து நல்லதொரு கவிதை. அதென்ன அதிலும் பெண்களை வசைபாடியபடி. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ எந்த தவறுக்கும் பெண்கள்: தவறன்று. நீங்கள் சலனப்பட்டுவிட்டு பிறகெதற்கு அவர்களை வசைபாடியபடி ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ புகைப்பிடிக்க மட்டம் தெரியுது. பிறகெதற்கு ... ஆ

Thu Oct 11, 12:08:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

அதுதான் சொல்லிவிட்டனே " என்னைப் புனிதனாக்கியபடி" என்று.

என் தவறை மறைச்சு அவளின் தவறை தூக்கிப் பிடிச்சு.. இறுதில்.. என்னாச்சு நான் விண்ணேகி விட்டிருக்கிறேன். கவிதையில்...

இத்தனைக்கும் ஆண்களையும் குறை கண்டுதானே இருக்கிறேன்.

அப்புறம் என்ன..???!

நன்றி அக்கா உங்கள் வரவுக்கும் குசும்புக்கும்.

Thu Oct 11, 12:16:00 PM GMT+1  
Blogger நளாயினி செப்பியவை...

இது குசும்பா? நீங்கள் தான் சரியான குசும்பு.

Thu Oct 11, 04:58:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க