Thursday, November 22, 2007

கண்ணீரின்றிய மரணங்கள்.



கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு.

உயிராய் முளைத்த
அவர் காதலில்...
பூவாய் மலர்ந்தேன்
செடியாகும் கனவோடு..!

கருவறை தந்தவள்
கருணையே இன்றி
பாதியில் பறித்தாளே
சாய்த்தாளே என்னுயிர்.!

கண்ணீர் கூட
காணிக்கை இல்லை
உரிமைகள் கூட
எழுத்தில் இல்லை
கருக்கலைப்பென்று
வாழ்வை அழிப்பவரே
ஒரு கணம்...
எனக்காய் அழுவீரோ..??!

இல்லை
தொலைந்தது தரித்திரம்
சரித்திரம் படைபீரோ..??!

நீரும் ஓர் நாள்
கருவோடு இருந்தீர்
மறந்தீரே
துணிந்தீரே
பாதகரே..!

கண நேர
சுகத்துக்காய்
ஏனென்னை
பலியிட்டீர்...
சிதைக்கின்றீர்
தளிருடலை..!

பிறந்ததும் கொஞ்சும்
உறவு
பிறக்க முன்
பாடையில் போவது
பாவமில்லையோ..??!
தளைக்க மானுடம்..!!!


கருக்கலைப்பு ஆண்டுக்கு - கிட்டத்தட்ட 46 மில்லியன்கள்.
தினமும் 126,000 சிசுக்கள் உலகில் கருக்கலைப்பால் அழிக்கப்படுகின்றன.


மூலம் யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 7:41 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

அருமை கண்ணீரின்றிய மரணங்கள்.

Thu Nov 22, 10:37:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க