Tuesday, January 22, 2008

புலிகளைக் குறிவைத்து அழிக்க வைக்கப்படும் சர்வதேச நகர்வுகள்.




புலிகள் மீது அனைத்துலக சமூகம் செய்யக் கூடிய அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

* சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை இட்டது.

* தமிழ் அமைப்புக்களின் நிதிகளை உறைய வைத்தமை.

* தமிழர் போராட்ட சர்வதேச பிரதிநிதிகளைக் கைது செய்ததும் கண்காணிப்பதும்.

* உளவு அமைப்புக்களின் செயற்பாட்டை .. சர்வதேசப் பொலீஸ் போன்றவற்றின் செயற்பாட்டை முழு வீச்சில் புலிகளின் சர்வதேச நகர்வுகளைக் கண்காணிக்க தூண்டி விட்டுள்ளமை.

* பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புலிகளையும் உள்ளடக்கி சிறீலங்காவுக்கு ஆயுத உதவி அளித்தல். இராணுவப் பயிற்சி மற்றும் நேரடி உதவியளித்தல்.

* சர்வதேசக் கடற்பரப்பில் புலிகளின் நடமாட்டத்தை இல்லாது செய்தல். கடற்கண்காணிப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

* புலிகளின் இராணுவ பலத்தை அழிக்க தொடர் இராணுவ மற்றும் விமானத் தாக்குதலைச் செய்யத் தூண்டல், உதவியளித்தல்.

* புலிகளின் இலக்குகளைக் குறிவைக்க நாசகார ஆயுதங்கள் மற்றும் செய்மதி உளவுத் தகவல்களைப் பரிமாறல்.

* தற்போது கடலடி பாதுகாப்பின் மூலம் கடற்புலிகள் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுதல்.



இந்தியாவால் வழங்கப்பட்ட நீரடி கண்காணிப்புப் படகு.

Underwater defence system to track 'Sea Tigers'

The Sri Lankan Navy has put in place an "underwater defence system" between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.

- டெயிலி மிரர்.


* அரசியல் ரீதியில் புலிகளை ஓரங்கட்டி கிழக்கில் தேர்தலும் சர்வ கட்சி குழுவின் அரசில் தீர்வுப் பொதியும் என்று புலிகளிற்கு எதிரானவர்களின் கைகளை ஓங்கச் செய்தல்.

* போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவியமை.

* புலிகள் இயக்கத்துள் பிளவுகளைத் தூண்டி அதனை சிதறடித்து பலவீனப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள்.

* தமிழர் தரப்பில் ஒரு பகுதியை புலிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் விதைத்து விட்டிருத்தல்.

* புலிகளை தனிமைப்படுத்தி அழிக்க திட்டம் தீட்டியுள்ளமை.

இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டின் புலிகள் நிதானமாகச் செயற்படும் அதேவேளை.. புலிகளுக்கு பக்க பலமாக உலகத்தமிழர்கள் என்றும் திகழ வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் போராட்ட பலமான புலிகள் சவால்களை வென்று தமிழ் மக்களின் ஒரே அரசியல் அபிலாசையான சுதந்திர தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும்..!

யாழ் இணையம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:49 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

தேவையான பதிவு

நன்றி தோழரே

Wed Jan 23, 04:52:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க