Wednesday, May 21, 2008

நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.





பிரிகேடியர் பால்ராஜ்.

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

ஆனையிறவின் நாயகனே
வன்னிவிக்கிரமவில் புயலவனே..!
தீரத்தின் விளைநிலமே
வன்னியின் செல்வ மைந்தனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

தமிழர் சேனைத் தலைவனின்
வீரத் தளபதியே
தலைவன் செய்திகள் சேருமுன்
சாதிக்கத் துடித்தவனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

கூவி வந்த யாழ்தேவி
புரட்டி விட்டவனே
திமிரெடுத்து வந்த சிங்களத்தின்
கதை முடித்தவனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

சாதனைகள் உன்
சட்டைப் பை ரகசியங்கள்.
சோதனைகள் உன்முன்
பட்டன வேதனைகள்.

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

ஈழக்கனவில் நாம்
நித்தம் அழுகிறோம்..
நீயும் ஏன் அண்ணா
மரணத்தை அணைத்தெம்மை
அழ வைத்தாய்..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

விடிவதற்குள் ஏனிந்த அவசரம்
விடிந்த பின்னும்
நிச்சயம்
தமிழரெம் இதயமெங்கும்
உன் பெயர் ஒலிக்கும்..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.


வீரவணக்க கவி - யாழ் இணையத்திலிருந்து.

பிரிகேடியர் பால்ராஜ் ஓர் களச்சரித்திரம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 6:01 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க