மே மே மே.. எனக்கு மூனு காலு..!
மே மே மே...
என்ன சத்தம் அங்க..
போதும் போதும்
முயலு கதை..
கேளுங்க என் சோகக் கதை..!
எனக்கு மொத்தம் நாலு காலு..
மகிந்த சொன்னா மூனு காலு
நானு சொன்னே
நா நா நா..
அடிச்சுப்புட்டா ஆட்லறி
ஆக்கிப்புட்டா மூனு காலா..!
மனிசப்பயலா
மகிந்த நீ..
ஆட்டுக்குட்டிக்கு
அடைக்கலந் தந்தா புத்தனு..
வெள்ளை வேட்டிக் கள்ளனு
நீயோ சொல்லுறா
புத்தன் வழின்னு
புத்தி கெட்டு..!
பாரு மகிந்த பாரு
காலு கூட இல்ல
நானு நிக்கிற மண்ணில..!
இது புலி பிறந்த மண்ணு..
சோரத்தான் முடியுமா
சோகம் தான் கூடுமா
எழுந்து நிக்கிற பாரு..
படையெடுத்து வரும்
சிங்கத்துக்கும் வைப்ப
ஒரு நாள்
ஆப்பு..!
மனிசப் பயலா
மகிந்த நீ..!
போடாத கூத்து
ஆடாதே ஆட்டம்..
வைப்ப
ஒரு நாள்
உனக்கு வேட்டு..
மே மே மே..!
(ஈழத்தில் 07-08-2008 அன்று முல்லை நகர் மீதான சிறீலங்கா இராணுவத்தின் ஆட்லறி மற்றும் வெடிகணை தாக்குதலில் பொதுமக்கள் மட்டுமன்றி 60 வரையான கால் நடைகளும் இறந்தன. அந்தத் தாக்குதலில் காயமடைந்து காலிழந்தும்... நிமிர்ந்து நிற்கிறது இந்த ஆட்டுக்குட்டி. படம்: புலிகளின் குரல் இணையத்தளம்.)
(நா நா நா என்பது சிங்களத்தில். அதுவே தமிழில் இல்லை இல்லை இல்லை என்றாகும்)
நன்றி யாழ் இணையம்.
Labels: கவிதை, குட்டிக்கவிதை
0 மறுமொழி: