சிறப்பான தோழியும் சீரழியும் சிங்காரிகளும்..!
சில்லறைத்தனமாய்
சிலையாய்
சிட்டாய்
சிவப்பு ரோஜாவாய்..
சில்மிசக் காதலுக்காய்
சிலாகிக்கப்பட்டவள்
சின்னத்தனமான சிந்தனைக்குள்
சிறைபட்டுக் கிடந்தவள்
சிங்களக் கொடும் பகை கண்டு..
சினந்தே எழுந்தனள்
சிறுத்தைப் படையணியில்.
சிந்திய குருதியும்
சிதறிய உடலமும்
சிவக்க வைத்த நிலமும்
சிவந்தழும் விழியும்
சிறப்பான விடுதலைக்கு
சில செலவுகள் தாம்.
சிந்திக்க வைத்ததில்
சிந்தனைச் சிதறலின்றி
சிறுத்தையாய் சீறினள்
சிங்களச் சிறைகள் உடைத்தே
சிகரமாய் மிளர..!
சிவந்தே விடியும் தேசமதில்
சிறகடிக்க செயல்படும் அவளே
சிறப்பான தோழி..!
சிறீலங்கன் தாம் என்று
சில சீவி முடிக்கா
சிங்காரிங்கள்...
சிறப்பெனச் சொல்லும் சீமைகள் எங்கனும்
சிவப்புக் கம்பளம் விரித்து
சிலாகிக்கும்
சில்லறை வரிகளில்
சிறப்பது மார்புக் கச்சுக்கு விடுதலை...
சிறையுடைப்பென்று கழற்றியும் எறிகிறார் மார்புக் கச்சை..!
சிறகடிக்குது அங்கும் ஓர் விடுதலை...
சிலர் பீற்றியும் கொள்கின்றார்.
சிந்தை பிசகிய - அச்
சிங்காரிகள் முகத்தில்.. காறி உமிழ்தலே
சிறப்பாகும் என்றும்..!
நன்றி யாழ் இணையம்.
Labels: கவிதை
0 மறுமொழி: