Friday, May 22, 2009

ஈழத்தமிழர் பாதுகாப்புப் பேரணி; சென்னையில் மக்கள் எழுச்சி.



போ‌ரினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ஈழத் த‌மிழ‌ர்களை பாதுகா‌க்க வ‌லியுறு‌த்‌தி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌‌க்க‌ம் தமிழ்நாட்டின் தலைநகர் செ‌ன்னை‌யி‌ல் நேற்று நடத்திய எழுச்சிப் பேரணியில் ப‌ல்லா‌யிர‌‌க்கண‌க்கானோ‌ர் கலந்து கொண்டனர்.

செ‌ன்னை ம‌ன்றோ ‌சிலை‌யி‌‌ல் இரு‌ந்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4:00 ம‌ணி‌‌க்கு இ‌ப்பேர‌ணி தொட‌ங்‌கியது.



இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌‌க்க‌‌த்த‌ி‌ன் ஒரு‌‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌‌ன் தலைமை‌யி‌ல் தொட‌ங்‌கிய பேர‌ணி‌யி‌ல் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தொ‌ண்ட‌ர்க‌ள், த‌மிழீழ ‌விடுதலை ஆதரவு இய‌க்க‌ம், புர‌ட்‌சிகர இளைஞ‌ர் மு‌ன்ன‌ணி, புர‌ட்‌சிகர தொ‌‌‌ழிலாள‌ர் மு‌ன்ன‌ணி, புர‌ட்‌சிகர மாணவ‌‌ர் மு‌ன்ன‌ணி, ஒடு‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்க‌ள் ‌விடுதலை மு‌ன்ன‌ணி ம‌ற்று‌ம் செ‌ன்னை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் ஈழத் த‌மிழ‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்லா‌யிர‌‌க்கண‌க்கானோ‌ர் ‌கல‌ந்து கொ‌ண்டன‌ர்.


செய்தியாக்கம் மற்றும் படங்கள் புதினம்.கொம்

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:02 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க