போர்த்திட்டாண்டா தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!
போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!
காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்தி
அடித்தவனுக்கே..
தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.
தமிழன் போல்
சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்
அவன் போல்
வீரம் உனக்கும் வருமா கேள்..??!
மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின்
எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..
தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!
வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.
தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா தமிழா
பாடு..!
(img: from dailymirror.lk)
Labels: அரசியல், ஈழம், கவிதை, சமூகம், தமிழன், தமிழ்நாடு, பொன்னாடை
0 மறுமொழி: