Saturday, July 17, 2010

சரத்குமார் மற்றும் சிறீலங்காவிற்கு போக திட்டமிடும் தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு ஒரு பொதுவான வேண்டுகோள்.



சரத்குமார் மற்றும் சிறீலங்காவிற்கு போக உள்ளதாக சொல்லும் நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் ஒரு பொதுவான வேண்டுகோள்..

உங்களின் கடந்த கால ஈழத்தமிழர் மீதான கரிசணை மற்றும் ஒற்றுமையுடன் கூடிய செயற்பாடுகளுக்கு என்றும் நன்றிகள். அதனை நீங்கள் தொடர வேண்டும். குறிப்பாக கொழும்பு இந்திய சினிமாத்துறை விருது வழங்கல் நிகழ்வை ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்களும் பகிஸ்கரித்து உங்கள் ஈழத்தமிழர் மீதான கரிசணையை மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியதற்கு பல கோடி நன்றிகள்.

அந்த வழியில் வந்த நீங்கள் தற்போது அசின் அக்கா வழியில் சிறீலங்கா செல்லப்போவதாக கேள்விப்பட்டு வேதனை அடைகின்றோம்.

உங்களுக்கு உண்மையில் மனதார துன்பப்படும் ஈழத்தமிழருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றினால்.. ஒரு ஈழத்தமிழர் உதவி நிதியத்தை ஆரம்பித்து அதனை இந்தியாவில் ஒரு தொண்டர் அமைப்பாக பதிவு செய்து அதன் கீழ் உங்கள் நிதி மற்றும் சேவைகளை உதவிகளாக இந்திய அரசின் அனுமதியோடு நேரடியாக ஈழத்தமிழர்களிடம் கொண்டு செல்லுங்கள். அந்த நிதியத்தில் இருந்து, ஈழத்தில் இருந்து அகதிகளாகி தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கும் உதவுங்கள்.

அதைவிடுத்து அசின் அக்கா போல்.. சிராந்தி.. மகிந்த (ஈழத்தமிழரின் துன்பத்திற்கு காரணமானவர்களின்) முதுகு சொறிவதை எல்லாம் ஈழத்தமிழரின் நலன் காப்பு.. துயர் துடைப்பு என்ற பதங்களின் கீழ் செய்ய வேண்டாம். இவை தமிழக முதல்வர் கலைஞரை திருப்திப்படுத்தலாம்.. ஆனால் ஈழத்தமிழரை மீண்டும் மீண்டும் காயப்படுத்துவதாகவே அமையும்.

நன்றி.

பாதிப்புகளை சந்தித்த
ஈழத்தமிழன்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:16 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க