Saturday, March 10, 2012

உங்கட முதல் "பள்ளி" க் கூட அனுபவம் எப்படி..?!

இந்தப் பாடல்களைப் பார்த்ததும்.. இப்படி எல்லாம் பலகாரம் சுட்டு வைச்சு.. பால்.. பழங்கள்.. அதுவும் வகை வகையா.. தந்து..பூப்பந்தல் எல்லாம் கட்டிலை சுற்றி போட்டு.. மெத்தையில்.. மலர் தூவி.. ஊது பத்தி கொழுத்தி வைச்சு.. செம்பு நிறைய எதையோ கொடுத்துவிட்டு.. பட்டுச் சேலையோட நகை எல்லாம் போட்டு.. பெண்ணையும் அனுப்பி.. மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி எல்லாம் கட்டி.. ஏதோ.. கோயில் திருவிழாவுக்கு போறது போலையா "பள்ளி" க் கூடத்துக்கு அனுப்பி வைச்சவை என்று கேட்கத் தோனுது....?!



இது உங்கட அந்தரங்க வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையா பேசச் செய்வதாக அமைந்தாலும்.. அது அல்ல நோக்கம். First night என்றால் எப்படி உங்கள் அனுபவம் இருந்திச்சு.. சண்டை பிடிச்சீங்களா.. சீதனம் போதாது என்றீங்களா.. அன்பா இருந்தீங்களா.. பாவம் பார்த்தீங்களா.. எனி என்ன மனிசி ஆச்சே.. மனிசன் ஆச்சே என்று வெறுப்பு வந்திச்சா.. இரக்கம் வந்திச்சா... இல்ல காய்ந்த மாடு கம்பில விழுந்த கணக்கா பாய்ந்து அடிச்சீங்களா.. இல்ல பயந்து நடுங்கித் தொலைச்சீங்களா.. இல்ல ஓடி ஒளிச்சீங்களா.. இல்ல ஹாட் அட்டாக்கே (Heart attack) வந்திட்டா.. எப்படியான சூழலில் அது நடந்திச்சு.. இப்படி சோடணைகள்.. பலகாரங்கள்.. எல்லாம் தந்த போது.. அதில அதிகம் மிணக்கட்டீங்களா.. உள்ள பலகாரம் எல்லாத்தையும் சாப்பிட்டிட்டு.. ஸ்ரெயிட்டா நித்திரைக்கு போயிட்டீங்களா.. போன்ற சுவாரசியங்களை எழுதலாம்.

இல்ல.. இப்படி அதி அப்பாவியா இருந்து..... மிகுதி சொல்ல விரும்பல்ல..! :) :lol:



 மேலும் கலியாணம் ஆகாதவங்க.. தங்களுக்கு எப்படியான முதற் பள்ளி அனுபவம் நல்லது என்று நினைக்கினம்.. என்பதையும் சொல்லலாம்.

குறிப்பு: கட்டாயம்.. ஆபாசமான விடயங்கள் எழுதக் கூடாது. அப்புறம் தலைப்பை நீக்கிடுவாங்க என்றில்ல.. எங்களுக்கு.. இப்படியான விடயங்களை கெளரவமான முறையில கதைக்கத் தெரியாது என்றதா முடிஞ்சிடும்..! வயதுக்கு வந்தும்.. ஒரு பக்குவமா கதைக்கத் தெரியல்லைன்னா.. அது பேசாப் பொருளாவே இருக்கட்டும். அது நமக்குத் தான் வெட்கக் கேடு. :icon_idea:

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:05 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க