Saturday, April 28, 2012

ஈழத்தில் தமிழ் - முஸ்லீம் சகோதரத்துவத்தை சிதைத்த சிங்கள பெளத்த பேரினவாதமே.. அதை பலப்படுத்தவும் செய்கிறது..!


(யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசின் முஸ்லீம் விரோத செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யும் முஸ்லீம்கள் - 27-04-2012)

இலங்கை தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த நிகழ்வுகளும் உள்ளன. அதேவேளை.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உச்சரிப்போடு.. அதன் தூண்டுதலுக்கு பலியாகி.. தமிழர்களின் போராட்டத்தை.. பயங்கரவாதம்.. என்றும்... எமது இனத் துரோகிகளின் கருத்துக்களுக்கு இணங்க.. பாசிசம் என்று சொல்லியும் இருக்கின்றனர்... அதன்படி.. தமிழர்களுக்கு எதிராக மிக மோசமாகவும் மதப் பயங்கரவாத வெறியோடும்.. நடந்தும் கொண்டுள்ளனர்..! இது கடந்த காலம்.

இன்று உள்ள கள யதார்த்தம் என்பது மாறுபட்டது. முஸ்லீம்கள் தங்கள் நிலையை பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. அவர்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பிய அதே சிங்களப் பெளத்த பேரினவாதம் இன்று.. அவர்களையும் குறிவைக்க ஆரம்பித்துவிட்டுள்ள நிலையில்.. மீண்டும் முஸ்லீம்கள் தமிழர்களின் விடுதலைக்கான வழி பற்றி நிற்க முனைகின்றனர்.

தமிழர்களின் பலமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி.. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி.. அவர்களை.. அதை.. முஸ்லீம்களின் பங்களிப்போடும் தான் சிங்களம் அழித்தது. இருந்தாலும்.. விடுதலைப்புலிகளை கடைசி வரை மதித்த முஸ்லீம்களும் உள்ளனர். தமிழர்களின் போராட்ட நியாயத்தைப் புரிந்து கொண்ட முஸ்லீம்களும் உளர். விடுதலைப்புலிகளின் தமிழ் மக்களின் கடந்த கால நிலைப்பாட்டை விளங்கிக் கொண்ட முஸ்லீம்களும் இருந்தனர். இன்று அந்தத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பை சிங்கள பெளத்த பேரினவாதம் தோற்றிவித்துள்ள நிலையில்.. தமிழ் மக்கள் முஸ்லீம்களின் இந்த சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு எதிரான குரலுக்கு ஆதரவளிக்க வேண்டும்..! இதனால் தமிழ் - முஸ்லீம் உறவுக்கிடையே சிங்களம் போட்ட தடைத்திரையை கிழித்து புரிந்துணர்வை கூட்ட முடிவதோடு.. தமிழ் மக்கள் வார்த்தை அளவில் இன்றி.. முஸ்லீம்களின் தனித்துவம்.. சம உரிமையை நிஜமாகவே அங்கீகரிக்கின்றனர் என்ற புரிதலையும் உண்டு பண்ண முடியும்..!

இது முஸ்லீம்களை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பிவிட்ட.. சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கும்.. சிங்கள அடிவருடி.. தமிழினத் துரோகிகளுக்கும் ( தமிழ் பேசும்.. புத்திசீவிகள் என்ற ஒரு கும்பல் உள்ளடங்க).... முஸ்லீம்களும் தமிழ் மக்களுக்கும் இணைந்து சரியான பாடம் கற்பிக்க கிடைத்துள்ள சரியான சந்தர்ப்பமாகும்..!

 

1990 முஸ்லீம்களின் வெளியேற்றம்.. ஒரு பாதுகாப்புக் காரணங்களுக்கான நடவடிக்கையே ஆகும். சிங்களத்தின் தூண்டுதலின் பெயரில் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே தூண்டப்பட்ட சமூக விரோதப் போக்குகள் கிழக்கைப் போல வடக்கிலும் தொடரக் கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒரு சரியான நடவடிக்கை என்பதை இன்றாவது முஸ்லீம்கள் உணரச் செய்ய வேண்டும். இதனை விடுதலைப்புலிகள் பலமுறை உணரச் செய்ய முற்பட்ட போதும்.. சிங்களத்தின் பேச்சை மதித்துக் கொண்டு அன்று முஸ்லீம்களும்.. அதனை தமக்கு எதிரான செயலாகவே இனங்காட்டினர். இன்றும் சிலர் சிங்கள அரசிடம் ஆதரவு பெற.... அதனையே செய்கின்றனர்.

ஆனால் 2002 போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின் விடுதலைப்புலிகள்.. முஸ்லீம் மக்களை தங்கள் சொந்த இடம் திரும்ப அழைத்ததன் மூலம்.. தமது செயலில் சொல்லில் இருந்த நியாயத்தையும் அவர்களுக்கு காட்டிவிட்டனர். இந்த கால இடைவெளியில் முஸ்லீம்களின் மனதில் விதைக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நச்சு விதைகள் இன்று விச விருட்சங்களாக வளர்ந்துள்ள நிலையில் அவற்றை முற்றாக வெட்டி அகற்ற வேண்டின்.. தமிழ் - முஸ்லிம் மக்களை எவர் பிரித்தாள நினைத்தார்களோ அவர்களின் நகர்வுகள் மூலமே சரியான சந்தர்ப்பங்களில்.. நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி.. வெளிப்படுத்தி.. அந்த உறவை மீண்டும் சந்தேகங்களுக்கு இடமின்றி.. கட்டி வளர்க்க வேண்டும். கட்டி வளர்க்கப்படும் அந்த உறவின் பலமே.. சிங்கள பெளத்த பேரின ஆட்சியாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும்.. அவர்களின் நேரடி.. மறைமுக ஆதரவளர்களுக்கும்.. சவாலாக இருக்கும்..!

விடுதலைப்புலிகள் முஸ்லிம் விரோத செயற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. முஸ்லீம் மக்களின் ஆதரவும்.. இருப்பும் தமிழ் மக்களின் இருப்போடு பிணைந்த ஒன்று என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்ததோடு.. முஸ்லீம்களுக்கும் புரிய வைத்தனர் அல்லது புரிய வைக்க முற்பட்டனர். தமிழ் - முஸ்லீம் உறவு பலப்படும் நிலையில் தான் எனி சிறுபான்மை சமூகங்களின்/ இனங்களின் உரிமையை கொஞ்சம் என்றாலும்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆட்சியைக் கொண்ட சிறீலங்காவில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களைப் போல.. தமிழர்களிடம் இருந்து முஸ்லீம்களும் எனி விலகி இருக்க முடியாது. அது அவர்களுக்குப் பலவீனம் என்பதை அவர்களும் புரிந்து கொண்டு.. தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளை முஸ்லீம்களும் கைவிடுதல் வேண்டும்..! தமிழ் மக்களும் முஸ்லீம்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டும்..! தமிழ் - முஸ்லீம் மக்களிடையே.. கடந்த கால நடவடிக்கைகளின் பின்னால் இருந்த கசப்பான உண்மைகளுக்கு சிங்களப் பேரினவாதமே காரணம் என்பதையும் தாம் அதற்கு பலிக்கடாவானதையும் முஸ்லீம்களும் உணர்ந்து தம்மை திருத்திக் கொண்டு.. தமிழர் விரோதப் போக்கில் இருந்தும் அவர்கள் மனதார மாற்றங்களைக் கொண்டு வந்து இரு தரப்பும்.. நல்ல பலமிக்க சகோதரத்துவத்தை கட்டி வளர்ப்பதே இன்றைய சூழலில்.. என்றும் அவசியமாகும்..!

சிங்கள பெளத்த பேரினத்திடம் இருந்து.. தமது உரிமை.. விடுதலையை வேண்டி நிற்கும்...தமிழ் மக்களும்.. முஸ்லீம்களின் மனதில் இருக்கும் காயங்களை ஆற்ற இந்தச் சூழலில் அவர்களை அரவணைத்து தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதும் அவர்களிடத்தில் தமிழ் மக்களோடு தாம் கூடிய சகோதரத்துவத்தோடு.. உரிமையோடு.. சமத்துவத்தோடு வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டுவதும் அவசியமாகும்..! :icon_idea:

(படங்கள் யாழ் இணையத்தில் இருந்து... தொகுப்பு நெடுக்காலபோவன்)

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:17 AM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நண்பர்களே வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடும் முயற்ச்சிகள் வேண்டாம். உலகத்தில் இவர்களுடன் வாழ்ந்தவர்கள் யாரை தான் இவர்கள் நிம்மதியா வாழவிட்டார்கள்.

Sat Apr 28, 11:54:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

பதவிக்கும் நாற்காலிக்கும் ஆசைப்பட்டு இனத்தின் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தியதில் இந்த முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் பங்குண்டு. தமது சுயநலன்களுக்காக எத்தனை பொய்களை இந்த சமூகம் அவிழ்த்து விட்டுத் திரிந்தது என்பதனை தமிழர் அறிவர். இருந்தும் எமது தலைவர் இவர்களை ஒருபோதும் பழிவாங்கும் நோக்குடன் செயற்படவில்லை. சமாதான காலத்திலும் கூட இவர்கள் முத்தரப்பு முக்கால் தரப்பு என்று பேச்சுவார்ததையை குழப்பியடிக்க உறுதுணை புரிந்தவர்கள். மொழிக்கும் மதத்திற்கும் வித்தியாசம் தெரியாது சிங்களத்திற்கு அடிவருடித் திரிந்தவர்கள். வேலைவாய்ப்புகளுக்காக தமிழரை தலைநகரில் காட்டிக் கொடுத்தவர்கள். இனியாவது பேரினத்தின் தந்திரங்களை புரிந்து கொள்ளட்டும். கருவேப்பிலை எப்போதும் தூக்கி எறியப்படும். சிங்களத்தின் அபிலாணஷை நிறைவேறி விட்டது. இனி இவர்கள் எதற்கு. இனியாவது எமது இனம் தமிழினம். நாம் தமிழர்கள் என்று புரிந்து கொண்டு எம்முடன் இணைய முயற்சிக்கட்டும்.

Sat Apr 28, 04:41:00 PM GMT+1  
Blogger Adirai Iqbal செப்பியவை...

//1990 முஸ்லீம்களின் வெளியேற்றம்.. ஒரு பாதுகாப்புக் காரணங்களுக்கான நடவடிக்கையே ஆகும். சிங்களத்தின் தூண்டுதலின் பெயரில் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே தூண்டப்பட்ட சமூக விரோதப் போக்குகள் கிழக்கைப் போல வடக்கிலும் தொடரக் கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒரு சரியான நடவடிக்கை என்பதை இன்றாவது முஸ்லீம்கள் உணரச் செய்ய வேண்டும்.//
இது தான் பாசிசம் . பாசிஸ்டுகள் அனைவரும் ஒரே மாதிரியாகவே சிந்திக்கின்றனர்.

Thu Jan 31, 07:28:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க