Sunday, May 18, 2014

மனித இன வரலாற்றில் மிகக் கொடிய இன அழிப்பு பெருந்துயர் நிகழ்ந்த 5ம் ஆண்டு நினைவு நாள்.


உலக மனித நாகரிகத்தில் மிக மோசமான மிக மிலேச்சத்தனமான மனித இனப்படுகொலையை தமிழ் மக்களுக்கு எதிராக..அரங்கேற்றிய சிங்கள பேரினவாதப் படைகளின் செயல்களில் ஒன்று.


தமிழிச்சி என்பதற்காகவே சிங்களத்தால் சீரழித்து கொல்லப்பட்ட எங்கள் தங்கை இசைப்பிரியா.. சிங்கள இனவெறி இராணுவத்தின் பிடியில் சித்திரவதைகளோடு.. உயிரோடு இருந்த போது.


நாங்கள் கடந்து வந்த பாதையில்.. இதுவும் வந்து போனது. மறக்க மன்னிக்க இது ஒன்றும்.. கண்ணில் பட்ட தூசி அல்ல. சிங்கள இனவெறி உலக வல்லாதிக்கங்களோடு கைகோர்த்து நின்று.. எம் மீது திணித்த அடக்குமுறையின்.. அத்தியாயங்கள் இவை..!


முள்ளிவாய்க்கால் மண்ணில் 25 நாடுகளின் சர்வதேச சதியில் சிக்கி.. சிங்களத்தால் கொலைவெறியோடு.. இனவெறியோடு.. மே 2009 இல் வீழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும்.. தமிழின உரிமைக்காக போராடி வீழ்ந்த மறவர்களுக்கும்.. அஞ்சலிகள்.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:53 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க