Sunday, July 27, 2014

சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!!

புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!!

மடல்::::



(புலிப்பார்வை படக் காட்சி)

இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன் வெளியில் தான் வெளிப்படையாக சொல்லுவாரா..??! மாட்டார். ஈழத்தில்.. பிள்ளை பிடியின் ஆரம்பமே இதுவாகத்தான் இருக்க முடியும்...!


(சிறீலங்கா சிங்கள இராணுவ சிறுவர் படையணி அணிவகுப்பு - காலி)

விடுதலைப்புலிகளிடம் மட்டுமல்ல.. இஸ்ரேலிடமும் சிரார் படையணி உள்ளது. சுவிஸிடமும் உள்ளது. சிங்கப்பூரிடம் உள்ளது. இப்போது சிறீலங்கா இராணுவமும்.. கடேட் (cadet) என்ற பெயரில்... வைத்திருக்கிறது. பிரிட்டனிடமும்.. நிறைய கடேட் என்ற பெயரில்.. சிறுவர்கள் சீருடை அணிந்திருக்கின்றனர்..கடின பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கனரக ஆயுதங்களை பாவிக்க பழக்கப்படுகின்றனர். அவர்களை எல்லாம் சிறுவர் போராளிகளாக காட்ட நினைத்தால் காட்டலாம். விடுதலைப்புலிகளிடம்.. கடேட் இருந்தன. அவர்கள் சண்டைக்கு அனுப்பப்படுவதில்லை. பெரும்பாலும் அணிவகுப்புகளில் ஈடுபடுவார்கள். களப் பின்பணிகளில் ஈடுபடுவதுண்டு. அவர்கள்.. இந்தியா ஒட்டுக்குழுக்களோடு சேர்ந்து செய்தது போல.. பிள்ளைகளை பிடித்து.. ஆயுதம் வழங்கி.. வீதியில் விட்டு ஒட்டுக்குழுக்களை பாதுகாக்க அடிபட விடவில்லை..!

இந்த உண்மையையும் பேசுங்கள். தேனி.. நெருப்பு இவற்றை பேசாது. ஏனென்றால் அவை ஒட்டுக்குழுக்களின் எல்லா அராஜகங்களையும் நியாயம் என்று போதிக்கும்.. ஒரு கொரூர எண்ணத்தில் வளர்ந்த இணைய பார்த்தீனச் செடிகள்..!!!

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:06 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க