Tuesday, November 10, 2009

யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!






சிங்கள சிறையில் கோர வதை படும் போராளிகள் அப்பாவிகள் கண்ணீர் காட்சி


இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் வதை படும் போராளிகள் அவர் சாந்த உறவுகள் அப்பாவி பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் சிறையில் அடைத்து கோர சித்திர வதை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் அந்த மக்களை காக்க மனித உரிமை மையங்கள் முன்னாள் தொடர் ஆர்பாட்ட பேரணிகளை நடத்துமாறு மானம் உள்ள தமிழர்களை வேண்டி கொள்கின்றோம் .இதனையே அந்த சிறைகளில் உள்ளவர்களும் வேண்டி உள்ளனர் .

கண்ணீருடன் தத்தளிக்கும் இந்த உறவுகளை காக்க புலம் பெயர மானம் உள்ள தமிழர்களே நீங்கள் முடிவெடுங்கள். இவர்களை காப்பது யார்..?

இறுதி யுத்தத்தின் போது வீதி இறங்கி போராடிய உங்களால் ஏன் இப்போது மனித உரிமை மற்றும் அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களை முற்றுகை இட முடியவில்லை ..?

இன்று இவர்கள் சிறைகளில் வதைபட்டு தவிக்கின்றனர் . நாளை மீள் குடியேற்றம் என்கின்ற போர்வையில் குடியேற போகும் நமது சொந்தங்கள் காணாமல் போகவும் கற்பழிக்க பட்டு மாளப் போவதையும் விரும்புகின்றீர்களா ..?

பல மூத்த போராளிகள் உட்பட பல ஆதரவாளர்கள் நிலை என்ன ..? இவர்களை நாம் இவ்வாறே விடுவதா ..?

நாளைய எம் சந்ததியும் முகவரி அற்ற சிங்களத்தின் அடிமைகளாய் வாழ்வதா..?

போக்கிடம் அற்ற சாதியாய் தமிழினம் வாழ்வதா...?

சிங்களத்து வீட்டு நாயும் எம்மை சீண்டி விளையாட நாம் விடுவதா ..?

துரோகிகள் எட்டபர்கள் என்கின்ற பட்டம் சூட்டும் விழாக்களை நிறுத்தி ஒன்று பட்டு போராடி எமது வாழ்வாதார சுதந்திர உரிமையை மீட்போம் ...

தமிழின விடுதலையின் தேச பிதாக்கள் என கூறும் சிலரின் வழி நடத்தல்கள் மேலும் திசை மாறி போகுமேயானால் உங்களை வராலாறு மன்னிக்காது .

நாம் வீதி இறங்கி மனித உரிமை மையங்களை முற்றுகை இட தவறுகின்ற ஒவ்வரு தடவையும் சிங்களம் வெற்றி களிப்பில் திளைக்கும் .

எதிர் வருடம் இலங்கை தேர்தலுடன் பல உண்மைகள் வெளி வரலாம்
பல காட்சி பதிவுகளும் வெளி வரலாம் அவை உலகத்தின் இதயங்களை உலுப்பும் என்பதில் சந்தேகமில்லை.

முடிவெடு உலக தமிழினமே !

இந்த படங்களில் உள்ளவர்களின் உறவுகள் யாரவாது இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். (இந்த படங்களில் உள்ளவர்களை இனங்காட்டும் செயலை உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் தவிர்ந்த வேறு எவருடனும் செய்யாதீர்கள். எதிரியின் உளவுத் தமிழ் கூலிகள் கூட இப்படங்களூடு தகவல்கள் திரட்ட முனையலாம்..!எனவே அவதானமாகச் செயற்படுங்கள்..!)

இந்த காட்சிகளின் பின் மக்களே உங்கள் கருத்தை கூறுங்கள் நாம் வீதி இறங்கி போராட வேண்டுமா இல்லையா என்பதனை.

source - click here

Labels: ,

| More
பதிந்தது <-குருவிகள்-> at 11:15 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு

Wednesday, October 14, 2009

போர்த்திட்டாண்டா தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!



போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்தி
அடித்தவனுக்கே..

தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்
அவன் போல்
வீரம் உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின்
எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..

தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா தமிழா
பாடு..!

(img: from dailymirror.lk)

Labels: , , , , , ,

| More
பதிந்தது <-குருவிகள்-> at 3:59 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு

Sunday, October 11, 2009

விலை போகும் தமிழர்களால் தான் தமிழர்களுக்கு விடுதலையும் இல்லை நிம்மதியான வாழ்வும் இல்லை..!




இலங்கையில் தமிழக குழு - தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை!


ராமேஸ்வரம்: இலங்கைக்கு திமுக கூட்டணிக் குழுவினர் பயணம் செய்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை தாக்கி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டி, மீனவரை கடலில் குதிக்க வைத்து தத்தளிக்க விட்டு வேடிக்கை பார்த்து விரட்டியடித்துள்ளனர் இலங்கை கடற்படை ரவுடிகள்.

இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசத்திற்கு இதுவரை எந்த விமோச்சனமும் இல்லை. இந்தியர்களான தமிழ்நாட்டவரை கிள்ளுக்கீரைகள் போல நினைத்துக் கொண்டு, இவர்களை எத்தனை அடித்தாலும் கேட்க நாதியில்லை என்று கருதி, தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

தமிழகத்தின் கடற் கோடியிலிருந்து ராமேஸ்வரம் மீனவரும், நாகை மாவட்ட மீனவர்களும் தொடர்ந்து கதறிக் கொண்டே உள்ளனர் - உதவி கோரி. ஆனாலும் இன்னும் அந்தக் குரல் உரிய காதுகளை துளைக்கவில்லை, மனதை தட்டி எழுப்பவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கடற்படைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் சென்றனர். இதில் 20 படகுகள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலை விரித்து மீனகளுக்காக காத்து இருந்தனர்.

அப்போது அங்கு 5 அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் மீனவர்களின் படகுகளுக்கு தாவி அவர்களை தாக்கியதோடு ஜி.பி.எஸ். கருவி, ஐஸ் பெட்டிகள், டீசல் கேன்கள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசினர்.

அத்துடன் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர். மேலும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கரீம், மனோகரன், இளையபெருமாள் ஆகியோர் இருந்த படகில் ஏறிய கடற்படையினர், மூன்று மீனவர்களையும் துப்பாக்கிகளின் பின்பக்கத்தால் தாக்கினர். பின்னர் படகு டிரைவர் மனோகரனை கடலில் குதிக்க உத்தரவிட்டனர்.

அவரும் உயிருக்குப் பயந்து கடலில் குதித்தார். ஆனால் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்து படகைப் பிடித்து மேலே வந்தார்.

அத்தோடு நிற்காத கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மீண்டும் வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டிய அவர்கள் பின்னர் மீனவர்களை அடித்து விரட்டினர்.

உயிர் தப்பினால் போதும் என்று பயந்து போய் மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பியுள்ளனர்.

மீனவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற அட்டூழியங்கள் குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து அறிக்கைகள் மூலம் பேசிக் கொண்டிருக்காமல், இலங்கைக் கடற்படையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.

இதுவரை இலங்கை கடற்படை நடத்திய அத்துமீறிய தாக்குதல்களுக்கு 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தவித்து வரும் தமிழர்களின் நிலையை அறிவதற்காக திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இங்குள்ள தமிழர்களை இலங்கை கடற்படை சாவாதனமாக அடித்து விரட்டியிருப்பது இந்தியாவையும், தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தும் செயல் என்றும் மீனவர்கள் கருதுகின்றனர்.

source:thatstamil.com

Labels: , , ,

| More
பதிந்தது <-குருவிகள்-> at 11:07 AM | 0மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு

Saturday, October 10, 2009

ராஜபக்ச - கருணாநிதிக்கு கூட்டு இன அழிப்பிற்கான நோபல் பரிசு.



2002 ம் ஆண்டில் எழுதப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பின் இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் சிறீலங்கா சிங்கள ராஜபக்ச அரசு 2006 வாக்கில் தமிழர் தாயகம் எங்கும் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

2007ம் ஆண்டு தென் தமிழீழம் என்று அழைக்கப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. அப்போது பல நூறு தமிழர்கள் உயிரிழந்துடன் காயப்பட்டும் அகதிகளாகவும் போயினர்.

அதன் பின் 2008ம் ஆண்டு முற்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது சிங்கள அரசு.

பன்னாட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெற்றிகரமாக சிங்கள அரசால் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் இந்தியா போன்ற நாடுகள் வெறும் கண்துடைப்புக்காக கண்டித்ததோடு சரி. ஆனால் உள்ளூர சிங்கள அரசு அப்படிச் செய்ததை ஊக்குவித்ததுமின்றி சிறீலங்கா இராணுவத்தலைமைகளை புதுடெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் பீஜிங்கிற்கும் அனுப்பி இராணுவ மற்றும் இராஜதந்திர உதவிகளை பெற வழி செய்து கொடுத்ததுடன் இஸ்ரேல், ஈரான் மற்றும் ரஷ்சியா உட்பட்ட முன்னாள் வார்சோ நாடுகள் சிலவற்றில் இருந்து அதி நவீன ஆயுதக் கொள்வனவுகளையும் செய்து கொடுத்தனர்.

நீண்ட ஒரு அபாயகரமான போர் திணிக்கப்படப் போவதை உணர்ந்து கொண்ட வட தமிழீழம் என்று அழைக்கப்படும் இலங்கையின் வடக்கு மக்கள் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களை அவை செயற்பட்ட பகுதிகளில் தங்கி இருக்கக் கோரினர். ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு ஐநா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் வன்னியில் இருந்து விரட்டி அடித்தது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் இயங்கி வந்தது.

அதன் பின் சிங்கள அரசு பல தொன் குண்டுகளைக் கொட்டி வன்னி மீது பொர் தொடுத்தது.

உலகிலேயே குறுகிய காலத்தில் அதிக அளவு விமானக் குண்டுகள் வீசப்பட்ட பகுதியாக வன்னி மக்கள் குடியிருப்புக்கள் விளைச்சல் நிலங்கள் இனங்காணப்பட்டன. இதனை சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச தனது வெற்றிப் பிரச்சாரக் கூட்டமொன்றில் புகழுரையாக தனது விமானப்படையின் சாதனையாக சிங்கள மக்களுக்கு புகழ்ந்து தள்ளினார்.

போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது.. உலகெங்கும் தமிழ் மக்கள் கதறி அழுதனர். பலரின் வாசற்படிகளில் கிடந்து புரண்டனர். உண்ணா நோன்பிருந்தனர்.. ஊர்வலங்கள் போயினர். மக்கள் மடிகிறார்கள்.. அகதிகளாக்கப்படுகிறார்கள்.. உடனே இந்தப் போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று உலகின் மனச்சாட்சியை தட்டிக் கொண்டே இருந்தனர்.

ஆனால் இந்தியா உட்பட எந்த நாடும் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சில நாடுகள் அக்கறை காட்டுவதாகப் பாசாங்கு பண்ணிக் கொண்டு எரிகிற வீட்டில் கொள்ளி செருகிவிடும் வேலையையே செய்து கொண்டிருந்தன.

தமிழகத்தில் மட்டும் மக்கள் எழுச்சி ஒன்று உருவானது. அதை தந்திரமாக அடக்கும் பொறுப்பை சோனியா காந்தி கருணாநிதிக்கு அளித்தார். அதன் விளைவாக கடிதப் பரிவர்த்தனைகளும்.. சில மணி நேர உண்ணா விரதங்களும் மற்றும் சில உதவிப் பொருட்களை சேகரித்து கொழும்பு அரசிடம் கையளிப்பதும் என்று செயல்கள் செய்யப்பட்டு நேரம் வீணடிக்கப்பட்டதோடு.. மக்களுக்கு உண்மைகள் தெரிவது திட்டமிட்டு மறைக்கப்பட்டன.

உண்மையில் அக்காலப் பகுதியில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு உலகமெங்கும் இருந்து தமிழ் இளையோர் சார்பில் மற்றும் பிற தமிழ் அமைப்புக்களிடம் இருந்து ஈழத் தமிழ் மக்கள் சார்பில் உண்மை விளக்கக் கடிதங்கள் பல அனுப்பட்டன. ஒன்றுக்குக் கூட அவர் பதிலளித்ததில்லை. இதில் இருந்து அவரின் செயற்பாடுகளின் உண்மை நோக்கத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இறுதியில் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவோடு ராஜபக்ச அரசும் வன்னியில் 30,000 இற்கும் மேலான தமிழ் மக்களைக் கொன்று.. 3,00,000 அதிகமான மக்களை சிறைபிடித்து தனது போர் வெற்றியை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தது.

அவரும் பதிலுக்கு ராஜபக்ச அரசுப் போர் வெற்றியின் அடையாளமாக 500 கோடி பண உதவியும் போர்க்கப்பல் ஒன்றை பரிசாகவும் அளித்தார். தனது சிறப்பு தூதுவர்களை அனுப்பி விருந்துண்டு மகிழ வைத்தார். அந்தப் பெருமை சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனைச் சாரும்.

இறுதியில் போர் வெற்றி விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த நாராயணன் குலாமிடம் இன்னும் 180 நாட்களில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தி விடுவேன் என்றும் அதற்கு இந்தியா கண்ணிவெடிகளை அகற்ற உதவ வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார் ராஜபக்ச.

இன்று 180 நாட்கள் மிக வேகமாக கடந்து போய் விட்டன. ஆனால் மீளக் குடியமர்வு என்பது வெறும் வார்த்தை அளவில் இருப்பதோடு மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டும் சுமார் 15,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.

மொத்தத்தில் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் போர் வெற்றி விருந்துண்டு மகிழ்ந்து காலாண்டுக்கு மேல் கடந்து போய் விட்டது. அதுவரை எந்தக் கவலையும் இன்றி சோனியா காந்தியோடு இசைந்து ராஜபக்ச அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி இன்று.. தமிழ் இன கொலைவெறியன்.. இனவாதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு தனது மகள் உட்பட்ட பரிவாரங்களை சிங்களப் பாசறைக்கு அனுப்புகிறாராம். தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு வர..!

யாருக்கு இவர் கண்ணாமூஞ்சி விளையாட்டுக் காட்டுகிறார். கருணாநிதியின் கண் முன்னாலேயே இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை என்று சொல்லி முத்துக்குமார் என்ற இன உணர்வாளன் எழுதி வைத்துவிட்டு உயிர் விடுகிறான்.. அதைக்கூட பணத்தால் பதவியால் அரசியலால் சரிக்கட்டி விடலாம் என்று செயற்பட்ட கருணாநிதிக்கு இன்று ராகபக்சவின் அழைப்பின் பெயரில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஏன் திடீர் கரிசணை பிறந்தது..???!



தமிழின அழிப்பாளன் ராஜபக்சவிடம் விருந்துண்டு மகிழச் செல்லும் திமுக கூட்டணிப் பிரமுகர்கள். (படம்: தட்ஸ்ரமிழ்.)

வன்னியில் இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு இரங்கல் கூட்டத்தைக் கூட தமிழக சட்டசபையில் கூட்ட நாதியற்ற ஒருவர் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழின அழிப்பைச் செய்யும் சிங்கள அரசுகளின் மிகக் கொடிய தமிழின அழிப்பாளனாக தன்னை வர்ணித்துக் கொள்ளும் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக் கொண்டதானது ராஜபக்சவின் இன அழிப்பை விட மோசமான செயலாகவே தெரிகிறது.

இதே ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் பொங்குகிறான்.. இப்படி.. "வன்னியில் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்துமா சமுத்திரத்தை செந்நிறமாக்கட்டும் தமிழ் பெண்கள் சிங்களப் படையினருக்கு இரையாகட்டும் என்று."

இதனை இந்திய தமிழ் நாளிதழ்கள் கருணாநிதியின் பார்வைக்கும் கொண்டு வந்திருந்தன.ஆனால் அதற்காக எல்லாம் கருணாநிதி வருந்தி இந்திய அரசினூடு சிங்கள அரசை எச்சரிக்கை செய்யவோ முனையவில்லை..! மாறாக கோத்தபாய சொன்னதை செய்ய வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இன்று அவனிடமே அவனின் அழைப்பின் பெயரில் விருந்துக்கு ஒரு தூதுக்குழுவையும் அனுப்பி வைக்கிறார்.

ஆனால் இதே கருணாநிதி.. 1987 இல் இந்திய அமைதிப்படை பலாலியில் கால் பதித்த போது ஜே ஆர் ஜெயவர்த்தன என்ற சிங்கள தலைவன் கருணாநிதியை பார்த்து தமிழகத்தில் இருந்து குரல் கொடுப்பதை விடுத்து நேரில் வந்து நிலமையைக் கண்டு செல்லுங்கள் என்று இப்படி ஒரு அழைப்பை விடுத்த போது அதனை கருணாநிதி ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை..??!

அப்போது இனம் மானம் இன அழிப்பு சிங்கள அரசு என்று தத்துவம் பேசிய கருணாநிதி இன்று கூட்டத்தோடு கூட்டமாப் போய் சிங்கள அரசின் தமிழின அழிப்பை நில ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கச் செய்வது போன்று சிங்களப்படைகளால் நிறைந்துள்ள தமிழர் தாயகத்துக்கு தனது தூதுக்குழுவை அனுப்புவதன் நோக்கம் என்ன..??!

"எங்களுக்கும் சில அளவு தான் அதிகாரம் இருக்கிறது. அதனை தாண்டி எதனையும் செய்ய முடியாது என்று" தமிழ் மக்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு அவலக் குரல் கொடுத்த போது அதனை சுலபமாகத் தட்டிக்கழித்த கருணாநிதி இன்று ராகபக்சவின் அழைப்பை ஏற்று தனது விருந்தினர்களை அவனிடம் அனுப்பி தமிழின அழிப்பு விருந்துண்டு மகிழ்வது ஏன்..??!

வன்னியில் போர் நிகழ்ந்த போது ராஜபக்ச ஒரு கொலைவெறிஞன் என்று மேடையில் முழங்கிய கனிமொழி, திருமாவளவன் போன்றோர் இன்று அவனிடம் விருந்துண்டு மகிழச் செல்வது ஏன்..??!

சரி இவர்களுக்கு இத்தனை மக்களை கண்முன்னே சிங்களவன் கொல்ல பார்த்திருந்தோமே என்ற குற்ற உணர்வு மிக... திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் முளைத்துப் ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் போகிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்.. பெரிய பெரிய வளர்ந்த நாடுகளே, ஐக்கிய நாடுகள் சபையே ராஜபக்சவை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள நிலையில்.. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் இந்தியத் தேசிய அடிமையாகக் கிடக்கும் கருணாநிதியும் அவரது தூதுக்குழுவினரும் திறந்த வெளியில்.. முட்கம்பிச் சிறையில் கிடக்கும் தமிழ் மக்களுக்கு என்னத்தை பெரிதாகச் செய்து விடப் போகின்றனர்...?!

இவர்களால் ராஜபக்சவை தமிழ் மக்களுக்கு உதவியளிக்க பூரண அதிகாரமளிக்க தூண்டி விட முடியுமா..??! 3,00,000 தமிழ் மக்களையும் முட்கம்பிச் சிறைகளில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வைக்க முடியுமா.. சிங்களப் படைகள் செய்த இன அழிப்புக்கான நீதி விசாரணையை ஆரம்பிக்க இடமளிக்க வகை செய்ய முடியுமா...அல்லது அவன் (ராஜபக்ச) செய்த இன அழிப்புக்கு அவனை மன்னிப்புக் கேட்க வைத்து.. சிங்களப் படைகளை தமிழர்களின் நிலத்தில் இருந்து வெளியேறக் கேட்கத்தான் முடியுமா..??! இல்லவே இல்லை..! இதில் எதனையும் இவர்கள் செய்யப் போவதில்லை.

இவர்களால் முடிந்தது.. தமிழனை சிங்களவன் எப்படி அடிமையாக நடத்துகிறான் என்பதை பார்த்து ரசித்து விட்டு.. விருந்துண்டு மகிழ்வதே. சிங்களவனின் இறுமாப்பில் இவர்கள் பூரிப்படைவதே..!

ராஜபக்சவினால் கருணாநிதிக்கு விடப்பட்ட, சிறீலங்காவிற்கு வருகைக்கான அழைப்பை ஏற்றான திமுக கூட்டடணி பிரமுகர்களின் இந்த விஜயத்தின் மூலம்.. அவர்கள் செய்யப் போவது ஒன்றை ஒன்று மட்டுமே. அது.. சிங்களத்தின் தமிழின அழிப்பை, சிங்கள ஆக்கிரமிப்பை தமிழர் தேசத்தில் அங்கீகரிப்பதை மட்டுமே செய்யப் போகின்றனர். சோனியா காந்தி தனது சொந்த நலனுக்காக முன்னெடுக்கும் தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் சிங்கள - இந்திய கூட்டுச் சதியின் நாசகார நகர்வின் ஒரு பகுதியே இந்த விஜயம். இதற்கு திருமாவளவன் போன்றோரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போவதுதான் வருத்தமளிக்கிறது.

கருணாநிதியின் இந்த நாசகார வேலைக்காக அவருக்கும்.. இத்தனை காலம் இந்த நாசகாரியை தமிழினத்தின் தலைவன் என்று அழைத்துக் கொண்டிருந்ததை மாற்றி அவரின் உண்மையான சிங்கள இன விசுவாசத்தை அதனுடனான ரகசியக் கூட்டை வெளிப்படுத்தி வெற்றிகரமாக தமிழின அழிப்பைச் செய்ததற்காக.. செய்து கொண்டிருப்பதற்காக மகிந்த ராகபக்சவிற்கும் இந்த இன அழிப்புக்கான நோபல் பரிசை அளித்து கெளரவிக்கின்றோம்.

தமிழ் மக்களின் நீதியான பார்வையில் இருந்து.. இவர்களுக்கு இப்பரிசு அளிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட மேலதிக செய்தி.

Labels: , , , , , , ,

| More
பதிந்தது <-குருவிகள்-> at 6:54 AM | 5மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு

Sunday, October 04, 2009

பிரபாகரன் எப்படி இருக்கிறார்..??! நலமாக இருக்கிறார்...! எப்படி..??! ஈழத்தமிழன் ஒவ்வொருவருமே பிரபாகரன் தான் அப்படி..! :))

Labels: , , , ,

| More
பதிந்தது <-குருவிகள்-> at 11:16 PM | 2மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்பு