Sunday, July 30, 2017

சீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..?!

நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை.

இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.
ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப் போராட்டமும் இல்லை.

ஆக இருப்பது அமைதி வழியில் நடத்தப்பட வேண்டிய இராஜதந்திரப் போராட்டமே.
1985/6 களில் ஹிந்தியா தமிழ் போராளிகளுக்கு நேரடியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில்.. அப்போதைய சர்வதேச ஒழுங்கில்.. இருந்த பனிப்போர் சூழலில்.. ஜே ஆர் ஜெயவர்த்தன.. அமெரிக்காவுக்கு நுரைச்சோலையில்.. வொய் ஒவ் அமெரிக்கா என்ற வானலை மையத்தை நிறுவ குத்தகைக்கு காணி விட்டுக் கொண்டிருந்தார். அது  அமெரிக்காவின் உளவு நடவடிகையின் நுழைவாகவே சோவியத் ஆதரவு ஹிந்தியாவால் பார்க்கப்பட்டது.

இன்று... இன்னொரு சூழல் எழுந்துள்ளது...

சீனாவின் ஆதிக்கம். அது பொருண்மிய ரீதியிலும் சரி.. இராணுவ ரீதியிலும் சரி.. விரைந்து வளர்ந்து வருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியம்.. பசுபி பிராந்தியம்.. அரபிக் கடல் பிராந்தியம் என்று சீனா அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்குப் போட்டியாக.. அமெரிக்க தலைமை நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறது.

இப்போ.. ஹிந்தியா அமெரிக்காவின் பக்கம் நிற்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.. காரணம்.. சீனாவும் ரஷ்சியாவும் காட்டும் நெருக்கம் என்பது.. சீனா பாகிஸ்தானுடன் காட்டும் நெருக்கமென்பது.. சீனாவின் பல்வேறு பொருண்மிய.. இராணுவ நோக்கங்களைக் கொண்டது. ஆகவே சீனா அதனைப் பலப்படுத்துமே தவிர பலவீனமாக்காது. இந்த நிலையில்..ஹிந்தியா பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ள நிலையில்.. அது அமெரிக்காவை நோக்கி சார வேண்டிய நிலை உருவாகி இருக்கும் சந்தர்ப்பத்தில்..

சிங்களம்.. சீனாவை.. கூடிய அளவு அரவணைப்பதானது..  தமிழர்களுக்கு ஒரு ராஜதந்திர நகர்வுக்கான வெளியை உருவாக்கும்.

அந்த வெளியில்.. மேற்குலக தலையீடுகளுக்கான பலமான சூழலை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொடுப்பின்.. நிச்சயம் மேற்குலகத் தலையீட்டை ஹிந்தியா.. ஒரு தலைப்பட்சமாக எதிர்த்து நிற்க முடியாது.  இந்தச் சூழல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதிருந்த சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.
ஆனாலும்.. தமிழர் தரப்பு எப்படி.. மேற்குலக தலையீட்டுக்கான களங்களை அமைக்கும் என்பதில் தான் மற்றைய விடயங்கள் உள்ளன.

 நிச்சயம் தமிழர் தரப்பு மேற்குலக தலையீட்டுக்கு என்று திட்டங்களை வகுக்காமல்.. தமிழர் தரப்பின் நியாயங்களை அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயங்களை சான்றுகளாக்கி.. அதனூடு தமது நியாயங்களுக்கான எதிர்பார்ப்புக்களையும்... தீர்வுகளையும் திடமாக முன் வைத்து நிற்கும் போது.. நிச்சயம்.. அது சீன அணியின் கவனத்தையும் இழுக்கும்.. அமெரிக்க அணியின் கவனத்தையும் இழுக்கும்.

இதில்.. தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை.. போர்க்குற்றங்கள்.. நீதிக்கான விசாரணைகள் என்று சர்வதேசம் முன்மொழித்தவற்றோடு எமது திடமான நிலைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து.. நாம் எமக்குச் சாதகமான தலையீடுகளை நோக்கி ஒரு சூழலை எமது மண்ணில் உருவாக்கும் போது.. எமது மண்ணில் எமது அரசியலுக்கான ஆணித்திரத்தினை எமது மக்கள் வாக்கு பலத்தினூடு நிறுவி நிற்கும் போது.. இந்த உலகில் நிலை எடுத்திருக்கும் இரண்டு போட்டி அணிகளும் எம்மை அணுகியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கின்.. அதுவே ராஜதந்திர வெற்றியாக தமிழர்களுக்கு அமைய முடியும்.

புலிகள் அழிக்கப்பாட்டர்கள் என்று வெட்டிப் புளகாங்கிதம் அடைவதில் எந்த அர்த்தமும் இல்லை. அது எதிரிக்கு தான் சார்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். மாறாக விடுதலைப் புலிகள் இருந்தாலோ இல்லையோ.. தமிழர்களின்  சுயநிர்ணய சுயாட்சிக்கான.. அரசியல் கோரிக்கையுடன் கூடிய ஒற்றுமையான அரசியல் முன்னெடுக்கப்படின்.... தமிழர்களின் நில எல்லைகளும் காத்திரமாகப் பேணப்படின்..  எமக்கு சார்ப்பான சூழல்களை உலக அரங்கில் ஏற்படுத்தலாம்.

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பலமும்.. தமிழ் நாடு உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் பலமும்.. குரலும் ஒன்றிணைக்கப்பட்டால்.. நிச்சயம்... தமிழர்களால்.. சிங்களவர்களை விட.. உலகில் இன்று தோன்றி இருக்கும் இரண்டு போட்டி அணிகளையும் வைத்து தமக்குச் சாதகமான நன்மைகளை பெற அதிகம் முயற்சிக்க முடியும்.

அதனை விடுத்து.. மாவீரர்களை பயங்கரவாதிகள் ஆக்குவதாலும்.. புலிகளை இகழ்ந்து பேசுவதாலும்... நிலத்தை.. எமது மக்களின் தமிழர் தாயக அபிலாசைகளை கைவிடுவதாலும்.. எமது மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள்.. இனச்சுத்திகரிப்புக்கள்.. போர்க்குற்றங்களை மன்னிப்போம்.. மறப்போம் என்பதாலும்.. சிங்கள - இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களுக்கு எமது நிலத்தை எமது எல்லைகளை இழப்பதாலும்.. நாம் நிச்சயமாக.. இந்தப் பிராந்தியத்தில் எமது வலுவான இருப்பை உலகுக்கு நினைவுறுத்தவோ.. உறுத்திப்படுத்தவோ முடியாத சூழலே தோன்றும்.

நாம் யுத்தம் ஒன்றில்.. சர்வதேசத்தின் நலன்களை புறக்கணித்து எமது சொந்த மண்ணின் மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு நின்றதால்.. தோற்றோம். அதில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு.. எமது மண் மக்கள் சார்ந்து சோரம்போகாத வகைக்கு... அவை சார்ந்த அரசியலை வலுப்படுத்திக் கொண்டு.. சர்வதேசத்தின் நலன்களிலும் எமக்குச் சாதகமான தலையீடுகளுக்கு வழிவகுத்துச் செல்வதன் ஊடாகவே சர்வதேசத் தலையீட்டை நாம் உள்வாங்க முடியும். அன்றில். அது சாதாரணமாக அமையாது. இதில்.. மீண்டும்.. ஹிந்தியாவுக்கு முன்னுரிமை கொடுத்து அது ஏதாவது செய்யும் என்று வாழாதிருந்தோம் என்றால்.. அதுபோல் முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

முள்ளிவாய்க்கால்.. புதிய உலகச் சூழலுக்குரிய.. நல்ல ஒரு தொடக்கத்தை எமக்கு வழங்கிச் சென்றிருக்கிறது. அங்கு சிந்தப்பட்ட இரத்தமும் இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கனவும் ஈடோறோனும் என்றால்.. நாம்.. பரந்து.. ஒற்றுமையாக.. எமது மண் மக்களின் நலனில் உண்மையான அக்கறையோடு சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.

இந்தச் சூழலை சிலர் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் இன்னும் குழம்பி அல்லது குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இதனை நோக்கி கொண்டு வர வேண்டும். ஆனால் குறுக்கால போவர்களை பற்றி அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல்..  எம்  மக்கள் பற்றிய சிந்தனையில் ஒரு நேச எண்ணங்களைக் கொண்டவர்கள் எல்லோரும் நெருங்கிச் செயற்படுதல் என்பதே இன்றைய தேவையாகும்.. அது தாயகம்.. புலம்பெயர் தேசங்கள்.. தமிழ்நாடு.. மற்றும் இதர உலகமாக இருக்காலம்.

தமிழ் நாட்டில்.. தமிழர் ஆட்சி அமைவதும்.. இதுக்கு வலுச் சேர்க்கும்... அல்லது தமிழர் ஆட்சி அமைய இடம் கொடுத்திருவோமோ என்று திராவிட ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யக் கூடிய சூழலை வலுப்படுத்த வேண்டும். அதனையும் நாம் சமாந்திரமாக நகர்த்திச் செல்ல வேண்டும். tw_blush:

நன்றி: நெடுக்காலபோவன் (யாழ்)

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:07 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க