Tuesday, August 25, 2009

சிங்களப் படைகளின் தமிழினப் படுகொலையின் ஆதாரங்கள் சிக்கின..! (காணொளி.)



சிங்களப் படைகளால் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள்.. சிங்களச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசிக் கமராவினூடு காட்சிப்படுத்தப்பட்டு 8 மாதங்களின் பின் வெளி உலகுகின் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மேற்குறிப்பிட்ட சித்திரவதைக்கான காணொளி 2009 ஜனவரித் திங்களில் வன்னியில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஆதாரம்: Channel-4

மேலும் இரு இணைப்புக்கள்.

Video shows style of extra-judicial killings in Sri Lanka

War Without Witness in Sri Lanka.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:21 PM

6 மறுமொழி:

Blogger பதி செப்பியவை...

மனதை உறையச் செய்தது... வதை முகாம்களில் நடைபெற்றுக் கொண்டுள்ள கொடூரங்களுக்கு இது ஒரு சாட்சியம். ஏன் சயனைட் உண்கின்றனர், அல்லது தனது உடல் கூட எதிராளியடம் சிக்கவிடாமல் செய்கின்றனர் என வினவுபவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை.

புகலி இணையமும், "இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்"
என்னும் தலைப்பில் இந்த காணொளியினை இணைத்துள்ளனர்.
இதனை 'இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்டிருக்கின்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://puhali.com/index/view?aid=282

Tue Aug 25, 09:40:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

தங்களின் ஆதங்கத்தோடு கூடிய கருத்துப் பகிர்வை வரவேற்கிறோம் பதி.

குருவிகள்.

Tue Aug 25, 10:06:00 PM GMT+1  
Blogger Chandravathanaa செப்பியவை...

காணச் சகிக்க முடியாத கொடுமைகள்

Wed Aug 26, 07:54:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் கிட்லரின் காலத்தில் நடந்த அதே கொடுமைகள்.

நன்றி அக்கா கருத்துப் பகிர்விற்கு.

Wed Aug 26, 08:05:00 AM GMT+1  
Blogger இரவி சங்கர் செப்பியவை...

யூத இனத்திற்கு என்ன நடந்ததோ அது அப்படியே தமிழர்களுக்கும் நடக்கிறது. சமீப நாட்களாக படித்துக் கொண்டிருக்கிற பா.ராகவனின் "நிலமெல்லாம் இரத்தம்", Schindler's List போன்ற திரைப்படங்கள் அதை அப்படியே கண் முன் நிறுத்துகின்றன.

சானல் 4ல் வந்த கானொளியில் கண்ட காட்சி அப்படியே இப்படத்தில் உள்ளது. என்னை மிகவும் பாதித்த படம் Schindler's List.

Thu Aug 27, 07:39:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உண்மை ரவிசங்கர். ஆனால் அப்போதெல்லாம் மனித உரிமைகள் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை உலகம். ஆனால் இப்போ மனித உரிமைகளை உச்சரித்துக் கொண்டே மோசமான படுகொலைகளை ஊக்குவிக்கிறார்களே.

யூதர்கள் அடிவாங்கினாலும் ஒற்றுமையால் நிமிர்ந்தார்கள். ஆனால் தமிழர்களில் ஒரு பகுதியினர் அடி வாங்க இன்னொரு பகுதியினர்.. எதிரிக்கும் அவனோட கூட்டாளிகளுக்கும் விசுவாசமுள்ள கேடுகெட்டவர்களாக எல்லோ செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த இனத்துக்கு விடிவு.. வருமா..??! வருத்தப்படத்தான் முடியுதா..??! :((

Thu Aug 27, 07:56:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க