Thursday, August 06, 2009

தும்பினியின் இடுப்பினில் தெரியுது தமிழீழம்.




சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!

தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று...
ஆக்கிரமிப்பு படைகளோடு
தும்பினியின் இடுப்பாட்டத்தில்
சதியோடு குதி போடுறோம்..
தெரியுது தமிழீழம்..
சிங்களச் சீமைப்பசுவின்
சிற்றிடையில் என்று
வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
எல்லாம் மாய மான் விளையாட்டு..
பிரபாகரன் எனும்
பெரும் வீரன் இருந்த
பயத்தில்..
உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..
அன்றும் இன்றும் என்றும்
எங்கள் வாழ்விடம்..
சிங்களப் பாசறை..!
அங்கே நாங்கள்
சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..
சிங்களத்தி
தும்பினியின்
இடுப்பினில் தெரிவது
தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க - தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
"நிரந்தர" விடுதலை..!

அதுவரை
எப்போதும்..
புலி எதிர்ப்பே
எங்கள் தாகம்..!


Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:07 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க