Wednesday, August 18, 2010

ஈழப்போராட்டம் உண்மையின் சாட்சியம் - 1



ஈழப்போராட்டத்தை சர்வதேச அரங்கில் பயங்கரவாதமாக்கியது புலிகளும் பிரபாகரனும் என்றே சில நாடுகளாலும் புலி எதிர்ப்பு தமிழ் ஆயுதக்குழுக்களாலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதுமே வெளிநாட்டவர்களை (இந்திய உதவி.. இந்திய அமைதிப்படையின் வருகை.. இந்தியாவின் தலையீடு.. இந்தியா ஈழப்போராட்டத்தில் செலுத்திய செல்வாக்கு.. இவற்றின் அடிப்படையில் இந்தியா ஈழப் போராட்டத்தின் ஒரு பங்காளி என்பதால் அதனை ஈழப் போராட்டத்தில் இருந்து வேறு பிரிக்க முடியாது. ஈழப் போராட்டம் தோன்றவும் முடியவும் இந்தியாவே காரணம்.. அந்த வகையில் அதன் மீதான நடவடிக்கைகள் வேறான வகைக்குரியவை.!) குறிவைத்து வன்முறைகளைச் செய்யவில்லை.

விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்குகள்.. ஈழத்தில் சிறீலங்கா மற்றும் பிற இராணுவங்களின் இருப்புக்கள், அரசியல் மற்றும் அரச பொருளாதார இலக்குகளாகவே இருந்துள்ளன. இவை 99.99% உள்நாட்டுக்குள்ளேயே இருந்துள்ளன.

ஆனால் 1984 மே திங்களில் இந்திய மத்திய அரசோடு நெருங்கிச் செயற்பட்ட ஈ பி ஆர் எல் எவ் அமைப்பால் அப்போது அவ்வமைப்பில் இடம்பெற்றிருந்த தற்போது ஈழத்தில் துப்பாக்கி சனநாயகம் செய்யும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் சிறீலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மேற்கொண்ட அமெரிக்க அலன் தம்பதிகளின் கடந்தலே ஈழப் போராட்டத்தில் வெளிநாட்டவர்கள் மீது மேற்கொண்ட முதலும் இறுதியுமான பயங்கரவாத கடத்தல் செயலாக இருக்கிறது.

//(Allen kidnappings.. On the night of 10 May 1984 the PLA, on the orders of Devananda, kidnapped newly-wed Ohio couple Stanley Bryson Allen and Mary Allen from their home Beach Road, Gurunagar, Jaffna.[6] The EPRLF/PLA suspected the Allens of being CIA agents. The PLA threatened to kill the Allen's unless a ransom of 50 million rupees ($2 million) was paid and 20 militants released.[7] The Allen's were released on 12 May 1984 after pressure was exerted by the Indian authorities.

http://en.wikipedia.org/wiki/Douglas_Devananda//

இவர்களை அமெரிக்க சி ஐ ஏ உளவாளிகள் என்று சொல்லி இந்தியாவின் தேவைகளுக்காக கடத்தியதாகவே ஈழப்போராளிகள் மட்டத்தில் அப்போது பேசப்பட்டதாக வரலாறு சொல்கிறது. ஆனால் அவை இன்று மறைக்கப்பட்டு புலிகளும் பிரபாகரனுமே ஈழப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதாக சிலர் உண்மைக்களை மறைத்துக் கொக்கரிக்கின்றனர்.

இந்த உண்மையின் தரிசனத்தை மேலும் கீழுள்ள கட்டுரையை வாசிப்பதன் மூலம் நீங்கள் மேலும் தெளிவுறுத்திக் கொள்ளலாம்.


கட்டுரை - 1

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:10 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க