Wednesday, April 07, 2010

உங்கட தலைவர் நெஞ்ச நிமித்துக் கொண்டு போகிறார் பாருங்கோ.



//புலிப் பாசிச பயங்கரவாதத்தை ஒழிச்ச பின்னரும் உங்கட தலைவருக்கு எதுக்கு சிங்களப் படைகளின் தயவு.//

1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வீதிகளில் எங்கும் யாரும் போகலாம் வரலாம். புலிகள் எந்தத் தடையும் போடவில்லை. காவலரணும் வைத்துக் காத்திருக்கவில்லை. ஆனால் 1995 இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களப் படைகள் அங்கு பல மாற்றங்களை உண்டு பண்ணின.

உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவின.

பாதைகளை மூடின.

காவலரண்களை அமைத்துக் கண்காணித்தன.

சோதனைச் சாவடிகளைத் திறந்தன.

கண்ணிவெடி வயல்களை உருவாக்கின.

மனிதப் புதைகுழிகளை நிறுவின.

வதை முகாம்களை நிறுவின.

காணிகளை சூறையாடின.

வீடுகளை இடித்துத் தள்ளின.

இப்படி என்னென்ன அடக்குமுறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தங்கு தடையின்றி செய்து கொண்டே இருந்தனர் கடந்த 15 ஆண்டுகளாக. இதற்கு எல்லாம் ஒத்தூதிக் கொண்டு சிங்களத்தின் கால் பிடித்து பிழைப்பு நடத்தியவர் தான் இப்போ சிலரால் தமிழர்களின் தலைவராம் என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியுறாராம் தங்கள் தலைவர் என்று டக்கிளஸ் தேவானந்தா என்ற சிங்கள அருவடியை முன்னிறுத்தி வருகின்றனர்.

அவர்களின் தங்கத் தலைவர்.. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் தென்மராட்சி மக்களை மீளக் குடியேற்றுகிறேன் என்று கூட்டிப் போய் படம் எல்லாம் எடுத்து பேப்பரில போட்டார். ஆனால் இறுதியில் தலைவரின் முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில் மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

இன்றோ.. தலைவர் தனது சிங்கள அருவருடிக் கூட்டத்திடம் கெஞ்சி மன்றாடி தாங்களே பூட்டி வைத்திருந்த யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிய பாதையை திறந்து வேடிக்கை காட்டுகிறார். யாருக்கு இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றனர்.

இதே பாதையால் எந்த தங்கு தடையும் இன்றி 1994 இல் பிக் மச் (யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மத்தியில் நடக்கும் பிரபல கிரிக்கெட் போட்டி) போய் பார்த்தவன் என்ற முறையில்.. இந்தப் பேடிகளின் கூத்தை.. இதுதான் சமாதானம்.. சுதந்திரக் காற்று என்று மக்களுக்கு காட்ட விளையும் இந்தத் தெருக் கூத்துக்களை கண்ணுறும் போது.. வேதனை தான் மிஞ்சுகிறது.

எங்கள் வீட்டில் வந்து நின்று கொண்டு எங்களுக்கே தடை போட்டுவிட்டு.. அந்தத் தடையை திறக்கிறம் என்றும் எங்களுக்கு விடிவளிக்கிறம் என்றும் வெளிக்கிட்டுள்ள இந்த விடிவெள்ளிகள்.. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகவும் சிங்களப் படைகள் தான் சீருடையிலும் சிவிலிலும் காவலுக்குத் திரிகின்றன.

இதுதான் யாழ்ப்பாணத்தார் 30 ஆண்டுகளின் பின் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் மகிமையாம். கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரேபிளேன் ஓடுமாம் என்பது இதைத்தான்.

பட உதவி: தமிழ்நெட்.கொம்

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:35 PM

3 மறுமொழி:

Blogger வெத்து வேட்டு செப்பியவை...

அண்ணே இப்பவும்
உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவி பாதைகளை மூடி காவலரண்களை அமைத்துக் கண்காணித்து
சோதனைச் சாவடிகளைத் திறந்து கண்ணிவெடி வயல்களை உருவாக்கி மனிதப் புதைகுழிகளை நிறுவி
வதை முகாம்களை நிறுவி காணிகளை சூறையாடி வீடுகளை இடித்துத் தள்ளுரானுகலா?

எப்போ நாடு மண்டையிலே நச்சென போட்டாங்களோ அன்னைக்கு எல்லாத்தையும் மூடிட்டான்கள்

Thu Apr 08, 12:36:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

வெத்து வேட்டு உங்கள் பெயருக்கு ஏற்ற மாதிரி எழுதிறீங்க.

இந்தச் செய்தியே மூடியுள்ளதை திறக்கிறது என்பதுதான். அப்ப இன்னும் திறக்காமல் கணக்க இருக்கு என்று தான் அர்த்தமும் கூட.

அதுமட்டுமன்றி இப்போ எல்லாம் சிங்கள ஆமி காணிகளை அபகரிச்சு குழந்தை குட்டியோட குடும்பம் நடத்திறாங்கள்.

பாதுகாப்பு வலயங்கள் எல்லாம் பெளத்த புனித பூமியாகி வருகின்றன.

உங்களுக்கு தமிழன் எக்கேடு கெட்டா என்ன.. நடு மண்டை பிளந்ததை வைச்சு பெருமைப்பட்டுக் கொண்டிருங்கோ.

இறுதியில.. குந்தவும் இடமில்லாமல் அலையப் போறீங்கள். நிரந்தரமாக அகதிகளாக.

Thu Apr 08, 04:53:00 PM GMT+1  
Blogger www.bogy.in செப்பியவை...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Wed Apr 14, 06:11:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க