Monday, April 27, 2009

ஈழத்தமிழருக்காய் முருகன் உண்ணாவிரதம்.



ஈழத் தமிழர்களிற்காய் திருவிளையாடல் செய்ய விரும்பிய முருகன் வள்ளி - தெய்வானை சகிதம் தமிழகத்தில் எழுந்தருளி இன்று காலை திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் உண்ணாவிரதம் இருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.

ஆனால் இந்த நவகால முருகன் செந்தூரிலோ பழனியிலோ குடிகொண்டிருக்கவில்லை.. அண்ணா அறிவாலயத்தில் பரிவாரங்கள் சகிதம் குடிகொண்டிருக்கிறார்.

இந்த உண்ணாவிரதம் அவரின் ஈழத்தமிழருக்கான பல திருவிளையாடல்களில் ஒன்று என்பது இருக்க.. பாவம் ஈழத்தமிழர்கள் தான் இன்னும் அவரின் அருள் கிடைக்காமல் ராஜபக்ச என்ற அசுரனின் கைகளில் சிக்குண்டு மாய்ந்து கொண்டிருக்கின்றனர்.

என்ன பாவம் செய்தனரோ.. முருகனுக்கு என்ன பரிகாரம் செய்யாமல் விட்டனரோ.. ஈழத்தமிழரைக் கைவிட்டுவிட்ட முருகன் ராஜபக்ச என்ற அசுரனுக்கே அருள் பாலிக்க தேவி சோனியாங்கைக்கு உடுக்கடித்துக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு வோட்டு மாங்கனிக்கும் குறிவைத்துள்ளாராம் முருகன்.அதன் பொருட்டே இந்த திருவிளையாடல் என்று பேசிக் கொள்கின்றனர் பக்த கோடிகள்.

நவகால முருகனுக்கு அரோகரா. ஈழத்தமிழனுக்கு கண்ணீரஞ்சலி.



பாவம் இந்த முருகன்.. ஏலவே சிலையானவர்.. இதைக் கேட்டு வள்ளி தெய்வானை சகிதம் விறைச்சு.. கல்லாகிப் போயிட்டார்..!

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:53 PM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

அட முருகனும் இரண்டு பொண்டாட்டியும் மஞ்சள் துண்டும் போட்டிருக்காரு. கருணாநிதியும் அதையே செய்யுறாரு. பெரியார் தாசனாகவும் நடிக்கிறாரு. எத்தனை திருக்கோலங்கள். எத்தனை திருவிளையாடல்கள்.

சரியான தேர்வுகள். பாராட்டுக்கள்.

Tue Apr 28, 06:48:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

Tue Apr 28, 08:18:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//அத்தோடு வேட்டு மாங்கனிக்கும் குறிவைத்துள்ளாராம் முருகன்.//

aanaal maangani kidaithadhu ennavo pillayarukkudhan.

Tue Apr 28, 08:05:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க