பொங்கலோ பொங்கல் - ஈழத்தமிழனின் குருதிப் பொங்கல்
ஈழத்தமிழரின்.. இன்றைய வாழ்வியல் நிலையில்.. எவ்வாறு நாம் பொங்கலோ பொங்கல் என்று தமிழர் திருநாளாம் பொங்கலை சந்தோசமாகக் கொண்டாட முடிகிறது..??!
அப்படிக் கொண்டாடும் நாம் தமிழர்களா.. அதையும் தாண்டி மனிதர்களா..??!
இதோ.. இந்த மக்களின் பொங்கலை பாருங்கள்.. குருதி வழியும் உடலும்.. சதைக்கோளங்கலான அழகு மேனிகளும்.. சிதைந்த வீடுகளும்.. இவைதான்... சிங்கள பேரினவாத இனவெறி ஆக்கிரமிப்பாளன் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு அளித்துள்ள பொங்கல் பரிசு.
இவற்றைப் பார்த்த பின்னுமா.. நாம் பொங்கலோ பொங்கல் சொல்லி கரும்பு கட்டி.. அரிசிப் பொங்கல் செய்யப் போகிறோம்...??!
நாம் பொங்க வேண்டியது.. தமிழர்கள் என்ற உணர்வளவில்.. சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்கள் விரோத இன அழிப்புக் கொள்கைக்கு முடிவு கட்டவே..! செய்வோமா அதை.. உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்...!!!
அதுவே இன்றைய நாளில் உண்மையான பொங்கல். தமிழர் திருநாள் பொங்கல்..!
சிங்கள பேரினவாத இனவெறி இராணுவமும் அதன் அரசும் கடந்த சில நாட்களில் (2009ம் ஆண்டில் )நிகழ்த்திய ஈழத்தமிழர் இனப்படுகொலையின் காட்சிகள். இவையே ஈழத்தில் 1948 இல் இருந்து தொடர்கதையாகி வருகிறது தமிழர்களுக்கு..!
படங்கள் - ஈழத்தில் இருந்து புதினம்.கொம் வாயிலாக.
Labels: அரசியல், சமுகம்., மக்கள் அவலம், மக்கள் பார்வை
5 மறுமொழி:
//நாம் பொங்க வேண்டியது.. தமிழர்கள் என்ற உணர்வளவில்.. //
Yes I am very much worried
this photos :(((
//விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்தியா உடனடியாக தலையிட்டு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தவேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்திற்கான நேரம், இடம், காலம் என்பன பற்றிய விபரம் தீர்மானித்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
அதேவேளை திருமாவளவன் எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் இப்போராட்டத்தை தொடங்கவுள்ளார் என சென்னை உள்ளூர் செய்தியாளர் தெரிவித்துள்ளனர்//
Please display the below link
sent mail to new USA President
http://www.tamilsforobama.com/sign/letter.html
Puduvai Siva.
ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளோடு உங்களின் உணர்வுகளையும் ஒருங்கிணைத்து பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு ஒரு தெம்பை அளிக்கும்..!
நன்றி சுந்தரவடிவேல் மற்றும் புதுவை சிவா.
சோனியா அம்மையாரே!
இந்த ரத்தமும் படுகொலைகளும்
போதுமா?இல்லை பிரபாகரனைப்
பழி வாங்க தமிழர்கள் அனைவரும்
சாக வேண்டுமா?
ஒட்டு மொத்தத் தமிழர்களையும் ஏமாற்றியது போதும்.
ஏலவே கணவர் அமைதிப்படையென்று கொலைகாரப் படையை அனுப்பி அழிச்சது போதாதென்று.. இவா வேற. ஈழத் தமிழன் என்ன எல்லாரும் ஏறி மேயுற மேய்ச்சல் நிலமா..??! :((