Friday, November 02, 2007

அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு.



தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்][புதினம்]

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
கிளிநொச்சி
2007.11.02


பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப்-கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவேல், லெப் வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,
செயலர்,
தலைமைச் செயலகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிந்தது <-குருவிகள்-> at 8:22 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க