Tuesday, January 22, 2008

புலிகளைக் குறிவைத்து அழிக்க வைக்கப்படும் சர்வதேச நகர்வுகள்.




புலிகள் மீது அனைத்துலக சமூகம் செய்யக் கூடிய அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

* சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை இட்டது.

* தமிழ் அமைப்புக்களின் நிதிகளை உறைய வைத்தமை.

* தமிழர் போராட்ட சர்வதேச பிரதிநிதிகளைக் கைது செய்ததும் கண்காணிப்பதும்.

* உளவு அமைப்புக்களின் செயற்பாட்டை .. சர்வதேசப் பொலீஸ் போன்றவற்றின் செயற்பாட்டை முழு வீச்சில் புலிகளின் சர்வதேச நகர்வுகளைக் கண்காணிக்க தூண்டி விட்டுள்ளமை.

* பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புலிகளையும் உள்ளடக்கி சிறீலங்காவுக்கு ஆயுத உதவி அளித்தல். இராணுவப் பயிற்சி மற்றும் நேரடி உதவியளித்தல்.

* சர்வதேசக் கடற்பரப்பில் புலிகளின் நடமாட்டத்தை இல்லாது செய்தல். கடற்கண்காணிப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

* புலிகளின் இராணுவ பலத்தை அழிக்க தொடர் இராணுவ மற்றும் விமானத் தாக்குதலைச் செய்யத் தூண்டல், உதவியளித்தல்.

* புலிகளின் இலக்குகளைக் குறிவைக்க நாசகார ஆயுதங்கள் மற்றும் செய்மதி உளவுத் தகவல்களைப் பரிமாறல்.

* தற்போது கடலடி பாதுகாப்பின் மூலம் கடற்புலிகள் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுதல்.



இந்தியாவால் வழங்கப்பட்ட நீரடி கண்காணிப்புப் படகு.

Underwater defence system to track 'Sea Tigers'

The Sri Lankan Navy has put in place an "underwater defence system" between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.

- டெயிலி மிரர்.


* அரசியல் ரீதியில் புலிகளை ஓரங்கட்டி கிழக்கில் தேர்தலும் சர்வ கட்சி குழுவின் அரசில் தீர்வுப் பொதியும் என்று புலிகளிற்கு எதிரானவர்களின் கைகளை ஓங்கச் செய்தல்.

* போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவியமை.

* புலிகள் இயக்கத்துள் பிளவுகளைத் தூண்டி அதனை சிதறடித்து பலவீனப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள்.

* தமிழர் தரப்பில் ஒரு பகுதியை புலிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் விதைத்து விட்டிருத்தல்.

* புலிகளை தனிமைப்படுத்தி அழிக்க திட்டம் தீட்டியுள்ளமை.

இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டின் புலிகள் நிதானமாகச் செயற்படும் அதேவேளை.. புலிகளுக்கு பக்க பலமாக உலகத்தமிழர்கள் என்றும் திகழ வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் போராட்ட பலமான புலிகள் சவால்களை வென்று தமிழ் மக்களின் ஒரே அரசியல் அபிலாசையான சுதந்திர தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும்..!

யாழ் இணையம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:49 PM | 1மறுமொழிகள் | Back to Main

யார் இந்த சர்வதேசம்.. யார் இந்த சர்வகட்சிக் குழு..?!



சிங்கள மயமாகும் தமிழர் தாயகப் பிரதேசங்கள்.

முதலில் யார் இந்த சர்வதேச சமூகம் என்பதை கருத்தில் எடுத்தால்..

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே சர்வதேச சமூகம் என்றாகின்றனர்..!

இவர்களின் அங்கீகாரம் கிடைத்த எல்லா இடமும் நீதி நிலைத்திருக்கிறதா..???!

ஏன் பலஸ்தீன தேசம் இன்னும் பிரச்சனைக்குள் இழுபடுகிறது..??!

வியட்நாமில்.. ஈராக்கில்... ஆப்கானிஸ்தானில்.. சோமாலியாவில்.. அமெரிக்கப்படைகள் செய்த மனிதப் படுகொலைகளை சர்வதேசம் விசாரித்து ஏதாவது தீர்ப்பு வழங்கி இருக்கிறதா...???! அப்படி வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு அமெரிக்காவை கட்டுப்பட வைக்கும் சக்தி ஏனைய உலக நாடுகளுக்கு உண்டா...???!

இந்திய அமைதிப்படைக்கு அவர்களின் பணிக்காக இன்று சிங்கள தேசம் சிலை வைக்கிறது. இதே சிங்கள அரசுதான் 1990 இல் இந்திய அமைதிப்படையை.. கொலைகாரப்படை என்று ஆக்கிரமிப்புப் படையென்று நாட்டை விட்டு வெளியேறு என்றும் சொல்லியது..??!

இந்திய அமைதிப்படை செய்த தமிழின அழிப்பு என்பது நியாயமானதா....???! இல்லை அநியாயமானதா.. அதை எந்த சர்வதேசம் விசாரணைக்கு உட்படுத்தி.. இந்தியப் படைகள் செய்தவற்றுக்கு தண்டனை வழங்க முன் வந்தது..??! எவ்வளவு நட்ட ஈடுகளைப் பெற்றுத் தந்தது..??!

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா பிரச்சாரப்படுத்த விடாமல் தடுக்கிறதே...??! இந்தக் கொலைகளை இட்டு ஏன் சர்வதேசம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை..?? நீதி விசாரணை செய்யவில்லை.. கொலைகளுக்கான பின்னணியில் உள்ள காரணிகளை இனங்காணவில்லை..?? கொலைகாரர்களை (அமெரிக்கப்படைகள் அதன் உளவாளிகள் தூண்டிவிட்ட கொலைகள் உள்ளடங்க) ஏன் நீதியின் முன் கொண்டு வரவில்லை..??!

சதாம் குசைன் அணு ஆயுதம் வைத்திருக்கிறார் படு பயங்கர இரசாயன ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பிழையான தகவல் வழங்கி செய்யப்பட்ட ஒரு வன்பறிப்பு நகர்வை சர்வதேசம் அடையாளம் கண்டும்.. ஏன் அது தொடர்பில் அமெரிக்காவை தண்டிக்க முன்வரவில்லை..??!

இதே நிலை கொங்கோவில்.. இல்ல ஒரு ஐரோப்பிய நாட்டில் ஏற்பட்டிருந்தால் அமெரிக்க சார்பு ஊடகங்கள் சும்மா இருக்குமா..??!

உலகில் நீதி என்பது அமெரிக்கா விரும்பும் வடிவில் தான் இருக்க வேண்டும் என்ற நியாயமில்லை..!

தமிழ் மக்கள் 30 வருட காலத்துக்கும் மேலாக அநீதிகளை சந்தித்து வருகின்றனர். 1983 கலவரத்தின் பின் சிறீலங்கா தந்த தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுகள் என்ன..??!

அப்படி இருக்கும் போது அண்மையில் இந்தியா வந்த பிறவுன் இலங்கை அரசை நோக்கி காத்திரமான தீர்வை முன் வையுங்கள் என்று மட்டும் அறிக்கை விடுவது உண்மையான அக்கறையின் வெளிப்பாடா..??!

பிரிட்டனின் இயன் பொக்ஸின் வரவை எதிர்த்தவர்களே இன்று தீர்வுப் பொதியை செய்கின்றனர் எனும் போது எப்படி காத்திரமான தீர்வு பெறப்படும்..???!

சர்வதேச நலனுக்கு ஏற்பதான் தீர்வென்றால்.. தமிழ் மக்கள் என்ன அமெரிக்க அடிமைகளா...??! அமெரிக்கா விரும்பும் வடிவில் தான் தீர்வை பெற முடியும் என்பது என்ன.. ஜனநாயகமா..???!

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய உரிமையை அவனே தீர்மானிக்க உரிமை உண்டு. தமிழர்கள் தங்கள் உரிமையை தங்கள் நிலத்தில் தீர்மானிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது..! தமிழர்கள் அடுத்தவரின் உரிமையை தட்டிப்பறித்து தமது உரிமையைப் பெறுவது என்பது அநீதியானது. ஆனால் தமிழர்கள் அப்படிச் செய்யவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமையை தங்கள் நிலத்தில் தக்க வைக்க எவருக்காகவும் எந்த சர்வதேசத்தின் அங்கீகாரத்துக்காகவும் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சர்வதேசத்துக்கு தமிழர்கள் மதிப்பளிக்கின்றனர் என்று காட்டத்தான் சர்வதேச உறவாடல்களே ஒழிய சர்வதேசம் தமிழர்களின் உரிமையை பெற்று தங்கத் தட்டில் வைத்து தமிழர்களிடம் ஒப்படைக்கும் என்பது முழு முட்டாள் வாதம்..!

அதேபோல் நாம் சர்வதேசத்துக்கு அஞ்சி எமது போராட்டத்தில் நாம் உறுதியற்று இருக்கவும் முடியாது. சர்வதேசத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப தந்திரோபாயமாக நகர்ந்து எமது போராட்டத்தை உறுதிப்படுத்தி சர்வதேசம் முன் வைக்கும் சவாலை முறியடிக்கும் போதே எமது பலத்தை இட்டு சர்வதேசம் தனது பார்வையை மாற்றும்..!

இன்றைய மகிந்த அரசு கொண்டு வரவுள்ள தீர்வுத் திட்டம் என்பது ஒரு போலியானது. சர்வதேசமும் சிறீலங்காவும் சேர்ந்து போடும் நாடகம். கிழக்கை ஆக்கிரமிக்கும் போது அப்பட்டமாக மீறப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டிக்காத சர்வதேசம் செத்துப்போன ஒப்பந்தத்தில் இருந்து சிறீலங்கா விலகப் போகிறது என்றதும் குரல் கொடுத்தது.. வெறும் பாசாங்கு. கிழக்கை ஆக்கிரமிக்க உதவியதே இதே சர்வதேசம் தான்.

கிழக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பின் தனது தூதுவர் குழுவை அமெரிக்கா அனுப்பியது. ஜப்பான் அனுப்பியது. இந்தியா அனுப்பியது. ஏன்..????! அங்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் படுமோசமாக மீறப்பட்டத்தை சர்வதேசம் அறியவில்லையா..??! அப்போ ஏன் கண்டிக்கவில்லை..!

கிழக்கின் முக்கியத்துவம் கருதி.. அதனை புலிகளிடம் இருந்து ஆக்கிரமிக்க சர்வதேசம் சிறீலங்காவுக்கு உதவியது. தங்கள் நலனுக்காக கிழக்கு மண்ணைப் பாவிக்க அங்கு இன்று ஆயுதக் குழுக்களை அப்பட்டமாக அரசியல் குழுக்களாகப் பதிவு செய்து களத்தில் இறக்கிவிடுவதை அமெரிக்கா தூதரம் உட்பட சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டு அங்கீகரித்து நிற்கிறது..??!

இதுதான் ஜனநாயமா..??! இல்லை. அமெரிக்காவின் நலனுக்கு எது அவசியமோ அதுதான் ஜனநாயகம்.

இப்படிப்பட்ட சர்வதேசத்திடம் தமிழரின் உரிமையை எதிர்பார்க்க முடியுமா..??! இவர்களுக்கு அஞ்சி தமிழர்கள் தங்கள் போராட்டத்தை உறை நிலையில் வைக்க முடியுமா..??!

தமிழர்களின் போராட்டம் என்பது அமெரிக்காவால் தீர்மானிக்கப்பட்டதல்ல. இந்தியாவால் தீர்மானிக்கப்பட்டதல்ல. சிறீலங்கா அரசின் தமிழர் உரிமைப் பறிப்பால் தீர்மானிக்கப்பட்டது. சிங்கள அரசு அதன் கொள்கையில் உறுதியாகவே இருக்கிறது. அதையேன் சர்வதேசம் உணராதபடி நடிக்கிறது.

சர்வதேசத்துக்கு மகிந்த அரசை 50% பிடிக்கும் என்றால் ரணிலின் அரசை 90% பிடிக்கும். எனவே சிறீலங்கா சிங்கள அரசியலில் குழப்பங்களை உண்டு பண்ணும் நகர்வுகளையும் சர்வதேசம் இந்தியா போன்றன எடுக்காமல் இருக்கா.. அதற்கேற்ப மகிந்தவை சிக்கலில் மாற்றவும் அவை பின்னிற்கா. இதை எல்லாம் புலிகளிடம் செய்ய முடியல்ல என்ற கவலைதான் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி மோதிகிட்டே இருப்பதன் பின்னணியும்..!

சர்வகட்சி குழுவின் தீர்வுப்பொதியை ஏதோ பெரிய எதிர்பார்ப்புடன் சமர்பிக்கச் சொல்கிறது சர்வதேசம். இதுவும் அதன் நாடகம் தான். சர்வகட்சிக் குழு என்பது பெயரளவில் தான். பிரதான எதிர்கட்சியே அதில் இடம்பெறவில்லை. ஜே வி பி இல்லை. தமிழர் தரப்பில் பலமான சக்தியான விடுதலைப்புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் இல்லை. இப்படியான ஒரு சர்வகட்சிக் குழு சமர்பிக்கும் தீர்வு என்பதில் எப்படி சர்வ தேச சமூகம் நியாயமான தீர்வை எதிர்பார்க்கும். இந்த சர்வகட்சிக் குழுவும் சர்வதேசமும் ஒன்றுதான். அமெரிக்காவும் அதன் வல்லாதிக்க ஆதரவு வால்களும் எப்படி சர்வதேசம் என்றாகினதோ அப்படித்தான் மகிந்த அரசும் அதன் பேரினவாத வால்பிடிகளும், தமிழர் விரோத சிங்களப் பேரினவாத ஆதரவுத் தமிழ் ஆயுதக் கும்பல்களும் அதில் இடம் பிடித்துள்ளன.

இதில் எப்படி நீதி பிறக்கும். இந்தத் தீர்வுப் பொதியினூடு எப்படி சமாதானம் வரும் என்று இந்தியாவும் கோடன் பிறவுனும் அமெரிக்காவும் ஜப்பானும் எதிர்பார்க்கின்றன. இந்த ஒன்றே போதும் சர்வதேசத்தை தமிழர்கள் தெளிவாக இனங்காண.

இவை எல்லாம் சுத்துமாத்து நாடகங்கள். அவர்கள் தெரிந்து கொண்டே தமிழர்களை ஏமாற்றுகின்றனர். அப்படியான ஒரு நிலையில்.. தமிழர்கள் மட்டும் 100% சர்வதேசத்தை நம்பி.. அவர்கள் எங்களை அங்கீகரிக்கனும் என்று நடக்கச் சொல்வது.. குழந்தைக்கு அரசில் சொல்லிக் கொடுப்பது போன்றது. இது தமிழ் மக்களை அகல பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு.. அதுதான் சுதந்தரம் என்று காட்டுவது போன்றுள்ளது.

விடுதலைப்புலிகள் சர்வதேசத்தை எப்படிக் கையாளனும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளதாகவே தெரிகிறது. எப்படி சர்வதேசம் எம்மை ஏமாற்ற முனைகிறதோ அப்படி நாமும் அதனை அணுக வேண்டும். எப்போ சர்வதேசம் எம்மை நோக்கிய நியாயத்தோடு வருகிறதோ அப்போ நாமும் நியாயத்தோடு அதனை நோக்கிச் செல்ல வேண்டும். மற்றும் படி.. இராஜதந்திரத்துக்கு இராஜதந்திரமாகத்தான் பதிலளிக்க வேண்டும்..! தமிழர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்காதவரை தமிழர்களுக்கு யாரும் உரிமை பெற்றுத்தர அக்கறை செலுத்தப் போவதில்லை..!

எனவே தமிழ் மக்கள் எங்கிருப்பினும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு செயற்பட்டு விடுதலைப்புலிகள் பலத்தை சர்வதேசம் உணர அதிகரிப்பதும் தக்க வைப்பதுமே தமிழர்கள் உலகில் உரிமை பெற்ற நிலத்தில் வாழ வகை செய்யும்..!

இரத்தம் சிந்தாமல் தமிழர்களுக்கு விடிவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை..!

கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள் உட்பட இன்றைய மொன்றாகல வரை.. அமெரிக்கத் தூதரகம் விட்ட அறிக்கைகள் புலிகளை வசைபாடியதன் பின்னணி இருக்க.. மகிந்த எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். இப்படி நிலை இருக்க.. அமெரிக்க சர்வதேசத்தையும் இந்திய பிராந்தியத்தையும் நம்பி தமிழர்கள் எப்படி உரிமை பெற முடியும்..???!

---------------

Colombo bombs not work of LTTE - President

President Mahinda Rajapaksa told media heads and editors today that recent blasts in Colombo was not the work of the LTTE, but some ‘other group’ with political and business interests.

-----------------

Armed group registering as political party "historical" - Ranil

Opposition Leader Ranil Wickremesinghe today called for the establishment of independent Commissions immediately to ensure a free and fair local government election in the East. He also charged that an armed group is for the first time being registered as a political party.

டெயிலிமிரர்.

தகவல்: யாழ் இணையம்

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:45 PM | 1மறுமொழிகள் | Back to Main

Sunday, January 13, 2008

அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்..?!



தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. இதற்கு ஒளவையார் காலத்துப் பாடல்களே சான்று. "வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்.. நெல்லுயரக் கோன் உயர்வான்" என்று..அன்றே ஒளவை உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தை அது மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கை எடுத்துச் சொல்லிவிட்டார்.

நெல்லை மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவர்களை மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால். இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாதி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு.. ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர்.



பாரம்பரிய நெற்பயிற் செய்கை வடிவம்.

நெற்பயிர் என்பது சூரிய ஒளியைக் கொண்டு அதன் இலைகளில் உள்ள பச்சையயுருமணிகள் எனும் கலப் புன்னங்கத்ததில் நடக்கும் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய ஒளிச்சக்தியை இரசாயன சக்தியாக (குளுக்கோஸ் அப்புறம் மாப்பொருள்)மாற்றுகிறது. நெல்மணியை அரசியாக்கி அந்த மாப்பொருளையே நாம் உணவாக்கிக் கொள்கின்றோம். அந்த மாப்பொருளே எமது உடலியக்கத்துக்கு அவசியமான சக்தியின் பிரதான முதலாக உள்ளது.

இதனடிப்படையில் தான் தைத் திங்களில்,பயிர் விளைநிலங்களில் நல்ல விளைச்சலைப் பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் உழவர் திருநாளை புதுத்தானியங்கள் கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி.. பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

அவர்கள் இதைப் புதிய ஆண்டின் தொடக்கமாகக் கருதி கொண்டாடுவதில்லை. பொங்கல் பண்டிகை முழுக்க முழுக்க உழவர்களின் திருநாள்.



தமிழ்நாடும் தமிழர்கள் வாழும் இலங்கையின் ஒரு பகுதியும். (தமிழ்நாடு பற்றிய மேலதிக தகவல் இங்கு)

தமிழர்கள் மட்டுமன்றி உழவுத் தொழில் செய்யும் பிற தென்னிந்திய மாநில மக்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமன்றி இந்திய உபகண்டத்தோடு பூமியின் மத்திய கோட்டை அண்மித்த நாட்டு மக்களும் இவ்வகையான உழவர் பண்டிகையைக் கொண்டாடும் குறிப்புக்களும் உண்டு.

"While Pongal is predominantly a Tamil festival, similar festivals are also celebrated in several other Indian States under different names. In Andhra Pradesh, Kerala, and Karnataka, the harvest festival Sankranthi is celebrated. In northern India, it is called Makara Sankranti. In Maharashtra and Gujarat, it is celebrated on the date of the annual kite flying day, Uttarayan. It also coincides with the bonfire and harvest festival in Punjab and Haryana, known as Lohri. Similar harvest festivals in the same time frame are also celebrated by farmers in in Burma, Cambodia, and Korea."

http://en.wikipedia.org/wiki/Pongal

பண்டைய காலத்தில் தமிழர்களின் பிரதான தொழிலாக உழவுத் தொழில் இருந்த காரணத்தால்.. இப்பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக இனங்காணப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மட்டுமே உழவர் திருநாள் அல்லது அறுவடைப் பெருநாளைக் கொண்டாடுகிறார் என்பது தவறான ஒரு எண்ணக்கரு.

உழவுத் தொழிலின் சிறப்பினைச் செப்பி.. அந்த தொழில்மூலம் பெறப்பட்ட நல்ல விளைச்சல் கண்டு மகிழ்ந்து அவ்விளைச்சலுக்கு உதவிய சூரியனுக்கு (இயற்கைக்கு) பொங்கலிட்டு நன்றி செலுத்தி ஊர் கூடி உணவுண்டு களித்தலே பொங்கலின் சிறப்பு ஆகும். அதுவே தமிழர் பாரம்பரியமும் ஆகும்.



மாட்டுப் பொங்கல் நிகழ்வில் கெளரவிக்க சோடிக்கப்பட்டுள்ள காளை.

மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று உழவுத் தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்குக் கூட பொங்கலிட்டு நன்றி செய்யும் நிகழ்வைச் செய்து தமிழர்கள் தாங்கள் பிற உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர்களாக, அவற்றின் நலனில் அக்கறை உள்ளவர்களாக.. அவற்றுக்கு நன்றி செய்யும் பரோபகாரிகளாக இருந்ததையும், இருப்பதையும் வெளிக்காட்டியே வந்துள்ளனர்.

இவ்வளவு தனித்தன்மைகளைக் கொண்ட தைப்பொங்கல் பண்டிகையை.. இன்று தமிழர்களின் புத்தாண்டாக பிரகடனம் செய்வதால் விளையப் போகும் நன்மைகள் என்ன என்று பார்த்தால்.. வெறும் குழப்பங்களே என்பதுதான் முடிவாக இருக்க முடியும்.

ஏலவே ஆங்கிலேய முறைப்படி ஜனவரி 1 இல் புத்தாண்டு உதயமாகிறது. உலக மக்கள் அனைவருக்காகவும் அது உதயமாகிறது. அதற்குள் 14 நாள் கழித்து தமிழருக்கு என்று ஒரு புத்தாண்டைப் பிறப்பிப்பதனால் எந்த நிர்வாகப் பயனும் கிடைக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் அரச, தனியார் நிர்வாகங்கள் என்பது ஆங்கிலேய கால-அட்டவணைப்படியே நிகழ்கிறது. அப்படி இருக்க ஏன் இந்த மாற்றம்..??! இது உண்மையில் அவசியம் தானா..??!

உண்மையில் இது சில அரசியல் நோக்கங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. பொங்கல் திருநாளின் தனித்துவத்தை இந்தப் புத்தாண்டுப் பிரகடனம் இன்னும் ஒரு நூறாண்டு காலத்துள் தலை கீழாக்கி.. சென்னை மெரினா கடற்கரையில் மதுபானம் அருந்தும் புத்தாண்டாகக் கொண்டாடக் கூடிய நிலையை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தைப் பொங்கல் தனது தனித்துவத்தை இழந்து அதன் அடையாளம் தொலைந்து அருகும் நிலையே தோன்றும்.



பொங்கல் படையல் பொருளான கரும்பை விட துள்ளியமாக வெளிப்படும் பொங்கல் திரைப்பட போஸ்டர்கள்.

இன்று கூட நகரமயமாக்கலின் விளைவால் பொங்கல் திருநாளின் பெறுமதி புதிய சினிமாப் படங்களை தயாரித்து வெளியிடுதல் என்ற நிலைக்குள் மட்டுப்பட்ட அளவிலேயே நகர மக்களிடம் இருக்கிறது. பல நகர வாழ் மக்கள் பொங்கலின் தனித்துவச் சிறப்பை அறியாதவர்களாகவே பொங்கலைக் கொண்டாடியும் வருகின்றனர்.

கிராமிய மக்கள் குறிப்பாக உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களே இன்றும் உணர்வு பூர்வமா பொங்கலின் தனிச் சிறப்பறிந்து அதைக் கொண்டாடி வருகின்றனர். இப்படியான ஒரு நிலையில்.. பொங்கலோடு புத்தாண்டு என்பதையும் புகுத்தி பொங்கலின் தனிச் சிறப்பை சீரழிக்கப் போகின்றனரே தவிர தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பது சுத்த பித்தலாட்டமாகவே தென்படுகிறது.



பாதுகாப்பற்ற சூழ்நிலைகளின் கீழ் அனுமதிக்கப்படும் தமிழக காளை அடக்கும் நிகழ்வுகள்.

ஏலவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு (ஏறு தழுவதல்)என்னும் காளை அடக்குதல் போட்டியை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்காலத்துக்கு ஏற்ப அதன் பாரம்பரியத் தன்மை இழக்கப்படாது மாற்றி அமைக்க முற்படாமையால் அது இந்திய உச்ச நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தைக் குறைக் கூறிப் பயனில்லை. ஆண்டுகள் தோறும் ஜல்லிக்கட்டால் மனித மரணங்களும் காயங்களும்.. மிருக வதைகளும் தொடர்ந்ததை கவனிக்காதிருந்த தமிழக அரசுகளே இவற்றுக்குப் பொறுப்பாகும்.



பாதுகாப்பான முறையில் நிகழும் ஸ்பானிஸ் தேச காளை அடக்கும் நிகழ்வுகள்.

இதே போன்ற போட்டிகள் ஸ்பெயின், மெக்சிக்கோ போன்ற இடங்களில் நடைபெறும் போது அவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி தமது பாரம்பரிய அடையாளத்தை நிலைநிறுத்துவதை இனம் கண்டும் தமிழக அரசுகள் பேசாமடைந்தைகளாக காலத்தை வீணடித்ததாலேயே இன்று தமிழரின் வீரப் பாரம்பரியம் நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. ஆனால் இந்த உண்மையைக் கூட புரியாது தமிழகத்தில் ஒரு தரப்பினர் பார்பர்னம்.. அது இதென்று பழைய பல்லவிகளைப் பாடிக் கொண்டிருக்கின்றனரே தவிர தடையை நீக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உத்தரவாதங்களை செய்ய முற்படவோ அவை குறித்துச் சிந்திக்கவோ இல்லை.

வெறும் அரசியல் நோக்கோடு செய்யும் சில நகர்வுகள் நீண்ட காலப் போக்கில் தமிழரின் பாரம்பரிய இன அடையாளத்தையே இந்திய உபகண்டத்தில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அச்சம் இன்று எழுந்திருக்கிறது.

இந்த நிலையிலேயே இவ்வாண்டுக்கான தைப்பொங்கலை வரவேற்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. ஈழத்திலோ போர் மேகம் தைப்பொங்கலை குருதிப் பொங்கலாக்கிக் கொண்டிருக்க தமிழகத்திலோ அது வேடிக்கைப் பொங்கலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிச் சீரழிகிறது.. தமிழரின் பாரம்பரியம். இதுதான் தமிழரின் தலைவிதியோ என்னோ..!

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:58 AM | 10மறுமொழிகள் | Back to Main

Saturday, January 12, 2008

உயிரம்புகள் திரை விமர்சனம்.



அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், உலகின் எந்த நாட்டினதும் நேரடி உதவியின்றி தங்கள் தாயக இருப்புக்காகப் போராடும் தமிழீழ மக்கள் தங்கள் போரியல் முறைகளில் ஒன்றாக உயிராயுதத்தைத் தாங்கி இருக்கின்றனர். மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளே இந்த உயிராயுதங்கள். அவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..!

----------------

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி -

அனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.

எமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வித்தியாசமான முயற்சி எனலாம். இதுவரை இதுபோன்றதொரு திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. என்ற நிலை இருந்தது. இத்திரைப்படம் மூலம் அக்குறை தீர்ந்துள்ளது என உணரப்படுகிறது.

நீண்டகாலப் பெருமுயற்சியின் வெளிப்பாடாகக்கூட இது இருக்கலாம். முதலில் சிறந்த வலுவான கதையை தெரிவு செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும். உயிரம்புகள் மூலம் வீடியோத் திரைப்பட உலகிற்குள் முதன்முதலாக ஊடக இல்லம் நுழைந்துள்ளதும் அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.

இவ்வீடியோ திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து நெறியாள்கை செய்திருக்கும் அல்பேட் பவுலசின் முயற்சி சாதனைக்குரியது. ஏனெனில் ஒரு இளைஞன் தன் வீடியோக் கமரா மூலம் அற்புதங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு அடையாளமாக உயிரம்புகள் வீடியோத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை இயக்கம் எனப் பல்துறை நிபுணராக நின்று படத்தை வெற்றிகரமாக இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்துள்ளார். அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான்.

சராசரி சினிமா உலகம் அல்லது திரைப்பட உலகம் என்பது விசாலமானது அதற்குள் தாக்குப்பிடிப்பது என்பது கடினமானது தான். இதில் பலர் மூழ்கிப் போனவரலாறுகளே நிறையவுண்டு. இது உலகம் பூராகவும் பொருந்தும். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் சினிமா என்பது எவ்வளவு கரடுமுரடான பாதைகளால் கடக்கப்பட வேண்டியது என்பது சம்மந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பார்கள். ஆயினும் இந்தக் கடின முயற்சியில் ஈழத்தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டு வருகின்றனர். என்பது பாராட்டுக்குரியது. என்பதோடு இத்தகைய முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் திரைப்பட இரசிகர்கள் போன்றோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்திரைப்பட உலகின் மத்தியில் உண்டு. அந்த வகையில் ஆதரவளிக்கப்பட வேண்டிய திரைப்படம் உயிரம்புகள் ஆகும்.

இப்போது நாங்கள் உயிரம்புகள் திரைப்படத்தில் மனதில் நின்ற சில காட்சிகள் உங்களையும் கவரும் என்பதற்காக ஒரு சில காட்சிகளைத் தருகின்றேன்.

சிறிலங்கா இராணுவம் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதியில் 250 போராளிகள்; சிங்கள் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து படைத்துறைத் தலைமை ஆலோசித்து எதிரியின் முற்றுகைக்குள்ளாகிய போராளிகளை மீட்பதற்கு தாக்குதல் கட்டளைப் பீடத்தில் தந்திரோபாயமான திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு மூன்று பேர் கொண்ட கரும்புலிகள் அணி தெரிவு செய்து அனுப்பப்பட்டு வெற்றிகரமான தாக்குதல் மூலம் இராணுவமுகாம் அழிக்கப்பட்டு 250 போராளிகளும் காப்பாற்றப்படுகின்றனர். இதுவே திரைப்படத்தின் கரு. படம் தொடங்கி முடியும் வரை விட்டுச் செல்ல முடியாதவாறு விறுவிறுப்புடன் நகர்கிறது.

காலையில் அந்தக் கரும்புலிகள் அணி புறப்படுகிறது. அந்த இராணுவ முகாம் மதியம் 12 மணிக்குத் தாக்கப்பட வேண்டுமென இலக்குவைக்கப்படுகிறது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தை இவர்கள் கடக்கவேண்டும் அதற்கு இவர்கள் கால் நடையாகவே நடந்து சென்று எதிரியின் இலக்கை அடைகிறார்கள். காலையில் இருந்து தாக்குதல் இலக்கு விரையும் வரையும் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன. அந்தக் கரும்புலி அணியில் இடம்பெற்றுள்ள மூவரின் இயல்பான நடிப்பு அனைவர் மனங்களையும் தொட்டுவிடுகின்றது. மூவரும் படத்திற்கு புதிய வரவுகள் தான் ஆயினும் தாங்கள் அறிமுக நடிகர்கள் என்று நம்பமுடியாதவாறு அவர்களின் நடிப்பு உரையாடல்கள் என்பன அமைந்திருக்கின்றன.

படத்தில் முக்கியமாகக் கணேஸ்மாமாவைக் குறிப்பிடவேண்டும். அவரது பாத்திரம் எல்லோர் மனங்களிலும் ஒருசுமையை ஏற்படுத்திவிட்டது. கரும்புலிகள் அணி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்து சந்திக்கும் ஆள் கணேஸ்மாமாவே. (அவர் ஒரு நகைச்சுவை நடிகர்) போராளிகளை இராணுவத்திற்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடு;த்துக் கொடுப்பதும், ஆயுதங்களை எடுக்க ஆலமர உச்சிக்கு ஏறுவதும், இடையில் களைத்துப் போய் இருப்பதும் ஏலாமல் வீழ்ந்து விடுவாரோ என எண்ணும் நேரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறுவதும் சுவாரசியமான காட்சியாகும். அவர் ஒரு வயது முதிர்ந்த மனிதராக இருந்தபோதும் மனத்துணிவோடு ஏறுவது இந்தப் போராட்டத்தின் மீது கொண்டிருக்கும் உணர்வைக் காட்டுகிறது.

ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் ஒருவர் எவ்வாறு போராளிகளுக்கு உதவுவதும் அது விடுதலை வேட்கையின் வெளிப்பாடாக இருப்பதும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆலமர உச்சியில் மறைந்திருந்த ஆயுதங்களை போராளிகளிடம் கொடுத்துவிட்டு அவர் அடையும் ஆனந்தம் உணர்வாக வெளிப்படுகிறது. கரும்புலி அணி அதனைப் பெற்றுச் செல்வதும் மனதைவிட்டு அகலாதவை. அவரது நடத்தை போராடும் தேசமக்களின் பற்றுணர்வை வெளிக்காட்டும் சம்பவமாகவும் அதுபடத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சியமைப்பாகவும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்ட கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற சசி, நிலவன், கீதன் ஆகியோரின் நடிப்பு அற்புதம். தாக்குதலுக்குத் தயாராக மூன்று கரும்புலிகள் படைத்துறைத் தளபதியால் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது பெண் கரும்புலிப் போராளிகளில் ஒருவரான சசி பேராடுகிறார். இந்தமுறை எனக்கு அந்த வாய்ப்பை தருவதாகக் கூறினீர்கள் இப்போது ஏன் என்னை விட்டுவிட்டீர்கள் என கூறுகின்றாள். அதற்கு இது சற்றுக் கடினமான பணி நீங்கள் கஸ்ரப்படுவீங்கள் எனக் கூறுகிறார் படைத்தளபதி. அப்போது இல்லை எங்களால் முடியும் தானும் தாக்குதல் அணியில் இடம்பெறப் போவதாக வலியுறுத்தி அதில் இணைந்து கொள்கிறாள்.

கரும்புலிப் போராளிகள் பயிற்சிப் பாசறையில் மிகவும் மகிழ்ச்சியோடு பயிற்சி பெறுவதும் தேசவிடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்ய தயாராக இருப்பதும் எந்தச் சவால்களைச் சந்திக்கும் திறனுள்ளவர்களாக இருப்பதும் இத்திரைப்படம் மூலம் எம் கண்முன்னே கொண்டு வரப்படுகிறது. கரும்புலி அணிக்குச் சசி தெரிவுசெய்யப்பட்டதுடன் அடையும் மகிழ்ச்சி பெண்களாலும் பெரும் தாக்குதல்களை நடாத்த முடியும் எனவாதிடுவதும் அவரது நடிப்பால் மேலும் வெளிப்படுத்தப்படுகிறது.

250 போராளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கட்டளைப்பீடத்தின் பணிப்பை நிறைவேற்ற வேகமாக நடந்து ஒரு இடிந்து போன வீட்டில் களைப்பாற நுழைகிறார்கள் அது இராணுவத்தாக்குதலால் சிதறிப்போயிருந்தது. அங்கே கூடிக்கதைக்கிறார்கள். நிலவன் சொல்கிறான் இதுதான் எங்கட வீடு இந்த முற்றத்தில் தான் ஓடி விளையாடுறனாங்கள். ஒரு நாள் விளையாடும் போது தங்கையோடு சண்டை பிடித்து அவள் பல்லுடைந்து போய்விட்டது. அம்மா அடிக்க ஓடிப்போய் இந்த மாமரத்தில ஏறிவிட்டன். என தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்த போது யதார்த்தமாக இருந்தது. அது எல்லோர் வீட்டிலும் நிகழும் ஒரு சம்பவமாக மனக்கண் முன்வந்து மோதியது. இராணுவத் தாக்குதல்களால் வீடு வாசல்களை இழந்து போன ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகவும் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. அனைவரையும் நெகிழவைத்தது அதுபோன்ற மரத்தடியில் இருந்து சாத்திரம் பார்ப்பதும் பிஸ்கட் சாப்பிடுவதும் கதை அளப்பதும் என எல்லாம் மனதில் நிற்கின்ற சம்பவங்களாக நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.

படத்தின் உச்ச கட்டமாக இராணுவத்தின் ஆட்லறித்தளம் முகாம் மீது கரும்புலிகள் அணி தாக்குதலை தொடர்கின்றனர். இந்த வெற்றிகரமான தாக்குதலைக் கண்டு சிங்களப்படை முகாம் கட்டளையதிகாரி துள்ளுவதும், குதிப்பதும் தன் வீரர்களிடம் புலிகளை அழிக்கும் படியும் கூறி கட்டுப்பாட்டுக்குள் வீரவசனம் பேசுவதும் முளிபிதுங்கி பூனைக்குட்டி மாதிரி சுத்தி ஓடுவதும் இறுதியில் சூடு வாங்குவதும் படை முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சியடையும் போதும் நடைபெறும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது.

இதில் குறிப்பாக சிங்களத்தில் படையதிகாரி பேசுவது தமிழ் திரைப்படத்திற்கு புதியமுயற்சி வித்தியாசமானதொன்றாக உள்ளது. அது பின்னிணைப்பாக தமிழில் வருகிறது. மொத்தத்தில் படையதிகாரியாக நடிக்கும் பரமநாதனின் நடிப்பு நன்றாகவிருந்தது.

இறுதிக்கட்ட தாக்குதல் ஓர் ஆங்கிலப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்தயது. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்பைத் தோற்றுவிப்பதாக இருந்தது. சராசரி ஒரு திரைக்கதை என்ன நோக்கில் செல்ல வேண்டுமோ அதுமாதிரி அமைந்திருந்தது.

இறுதியில் கரும்புலி அணி இராணுவ முகாமை முற்றுகையிட்டு தகர்த்தழிக்கிறது. நிலவன் வீரச்சாவு அப்போது சசி கீதனிடம் கேட்கிறாள் ஏன் நிலவன் போனவன்? எனக்குத் தானே அந்தச் சந்தர்ப்பம் என்றாள.; ஏன் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இசைப்பிரியனின் இசை படத்தை மெருகூட்டுகிறது. எமது மண்ணின் வாசனையை ஒளிப்பதிவாக்கி தந்த உயிரம்புகள் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒட்டுமொத்தமாக உயிரம்புகள் திரைப்படம் எமது மண் வரலாற்றில் ஒரு சிறந்த பதிவு. புதிய முயற்சியாக விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் காவற்றுறை என்பவற்றின் துணையோடு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். போராளிகளின் போர்க்களச் செயற்பாடுகளையும் அவர்களது வீரம் தியாகம் போன்றவற்றையும் இனம் கண்டு கொள்ளக் கூடிய நேர்நிலையில் உருவாகவும் இதனைப் பார்க்கலாம்.

எமது மண்ணின் வீரத்தையும்; ஈகத்தையும் எண்ணி வியப்புற்றிருக்கும் உலகின் முன் இத்திரைப்படமும் ஒரு புதியபார்வையை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது போன்ற படைப்புக்கள் வெளிவரவேண்டும் இன்னும் இன்னும் வர வேண்டும். ஈழத்தமிழர் திரைப்பட வரலாற்றில் ஊடக இல்லத்தின் முயற்சி பயன் மிக்கது. இது போன்ற படைப்புக்களைத் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டும் அதற்குத் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை வழங்குவர். நல்ல சிறந்த படைப்புக்கள் என்றும் வரவேற்றப்படும் என்ற யதார்த்த நிலைக்கு ஒருமைல் கல்லாக உயிரம்புகள் வெளிவந்திருக்கின்றன.

இதுவொரு பரீச்சார்த்த முயற்சி. எமது மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகள், மற்றும் உலகத் தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் இதனைக் கொள்ளலாம். நிச்சயமாக இத்திரைப்படம் உலகத்தமிழர் மத்தியில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அனைவரும் காணும் வாய்ப்புக் கிட்டும். எமது மண்ணின் வாசனையும் எமது மண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து விடுபட எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்ற செய்தியும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

படத்தில் நடித்துள்ள அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு நடிகரும் தன்பாத்திரத்தை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

குறிப்பாக கரும்புலியாக நடித்திருக்கும் சசி, நிலவன், கீதன் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டனர். அவர்களது இயல்பான நடிப்பு மிகமிகத் தத்துரூபமாக அமைந்து விட்டது. நீண்ட காலமாக இதுபோன்றதொரு படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசைக்கு வழி பிறந்துள்ளது.

அதுபோன்றே படத்தை நெறிப்படுத்திய அல்பேட்பவுலஸ் எங்கள் மனங்களில் பதிந்துள்ளார். உயிரம்புகள் தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்து தமிழர் மனங்களை குளிரச் செய்யப் போகிறது.

- கலி

மூலப் பிரதி இங்கு- சங்கதி.கொம்

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 1:02 PM | 1மறுமொழிகள் | Back to Main

Friday, January 11, 2008

விடுதலைப் புலிகளே உலகின் மிக மோசமான கடும்போக்காளர்கள் - FBI



அமெரிக்க உளவு அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது.

புலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ..

* புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர்

* மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்

* உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர்

* பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள்.

* கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர் (சிறீலங்கா அரச படைகள் கொல்லவில்லையாம்..!)

என்று காரணங்களை அடுக்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி அமெரிக்காவில் "பிறாட்" செயல்களில் ஈடுபட்ட பல புலிகளை தாம் கைது செய்துள்ளதாகவும் எவ் பி ஐ அறிக்கை தெரிவிக்கிறது.

-----------------------

இந்த அறிக்கைக்குப் பின்னால் அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கைகள் சில அது எதிர்பார்த்த வடிவில் நிறைவேறாததன் தாக்கம் இருக்கிறது.

அமெரிக்காவின் ஈராக் மீதான் படையெடுப்பின் எண்ணமும்.. ஆப்கானிஸ்தானில் தான் நினைத்ததைச் செய்ய முனைந்த திட்டங்களும்.. பாகிஸ்தானில் தான் சாதிக்க நினைத்தவையும்.. தற்போது தற்கொலைத் தாக்குதல் என்ற தீவிரவாதிகளின் முதன்மைத் தாக்குதல் யுக்தியால் முழுமையாக எட்டப்பட முயவில்லை என்ற ஆதங்கமே மேற்குலகு புலிகளின் போராட்ட நியாயத்தை மறைத்து புலிகளின் தாக்குதல் யுக்திகளை முதன்மைப்படுத்தி அவர்களைப் பயங்கரவாதிகள் என்று உச்சரிக்க காரணமாகும்..!

அமெரிக்க எவ் பி ஐ வெளியிட்ட தகவலின் படி பார்த்தால் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலைகளுக்கு றோ மற்றும் சிறீலங்கா உளவு அமைப்பினர் மட்டுமன்றி அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. காரணம்.. சர்வதேச மன்னிப்புச் சபை.. மனித உரிமைகள் அமைப்புக்கள் இக்கொலை தொடர்பில் சிறீலங்கா படைகளையும் குற்றம் சாட்டி வரும் வேளையில் அமெரிக்க எவ் பி ஐ மட்டும் புலிகளின் மீது இக்கொலைகளுக்கான பழியைப் போட முனைவதும்.. அதனையும் ஒரு காரணமாக்கி அவர்களைப் பயங்கரவாதிகள் என்று காட்ட முனைவதும்.. இக்கொலைகளின் பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்புக்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது செய்துள்ளது..!

இந்த அறிக்கை தொடர்பில் உலகத் தமிழ் மக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவிப்பதோடு.. அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருப்பதும் அவசியமாகிறது..! அமெரிக்கா புலிகள் அமைப்பின் சகல சர்வதேச நகர்வுகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்து தசாப்தம் (10 ஆண்டுகள் - 1998 இல் அமெரிக்கா புலிகளைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் இட்டது.) கடந்த பின்னர் தான் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது. புலிகள் மிகவும் தந்திரமான வகையில் அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ள உலகத் தமிழ் மக்களும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு சகல வழியிலும் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்க உளவு அமைப்புக்கள் தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்கும் தந்திரோபாய வழிவகைகளை மக்கள் இனங்கண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும். தமது செயற்பாடுகளின் ரகசியங்களை காக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.


-------------------------

LTTE is the Most Dangerous Terrorist Outfit in the World - FBI

The United States' top intelligence agency, Federal Bureau of Investigations (FBI) says that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is the most dangerous and deadly extremist organization in the world. The official website of FBI in its tops story yesterday said that LTTE is far more dangerous terrorists outfit than al Queda, Hezbullah or even HAMAS. Following is the full text of the article published on the website, www.fbi.gov

TAMING THE TAMIL TIGERS

From Here in the U.S.

As terrorist groups go, it has quite a r,sum,:

* Perfected the use of suicide bombers;

* Invented the suicide belt;

* Pioneered the use of women in suicide attacks;

* Murdered some 4,000 people in the past two years alone; and

* Assassinated two world leaders-the only terrorist organization to do so.

No, it's not al Qaeda or Hezbollah or even HAMAS. The group is called the Liberation Tigers of Tamil Eelam (LTTE) or the Tamil Tigers for short.

Needless to say, the Tamil Tigers are among the most dangerous and deadly extremists in the world. For more than three decades, the group has launched a campaign of violence and bloodshed in Sri Lanka, the island republic off the southern coast of India.

Its ultimate goal: to seize control of the country from the Sinhalese ethnic majority and create an independent Tamil state. Along the way, it has launched suicide attacks, assassinated politicians (including a government minister this week and even the Sri Lankan President), taken hostages, and committed all of kinds of crimes to finance its operations. The resulting civil war has taken the lives of nearly 70,000 Sri Lankans on both sides of the conflict since 1983 alone.

Why should you care? Certainly because of the suffering and bloodshed that the Tamil Tigers have caused. And because its ruthless tactics have inspired terrorist networks worldwide, including al Qaeda in Iraq. But also because the group has placed operatives right here in our own backyard, discreetly raising money to fund its bloody terrorist campaign overseas, including purchases of weapons and explosives.

The U.S. government has designated the Tigers a foreign terrorist organization, so their activities here are illegal. And we're determined to stop them, using the full range of our investigative and intelligence capabilities.

In April, for example, we struck an important blow when our Joint Terrorism Task Force in New York arrested the alleged U.S. director of the Tigers. The man supposedly held several fundraising events at a church and various public schools in Queens and in northern New Jersey in 2004. He is also accused of arranging high-level meetings between the group's leaders and U.S. supporters.

We've also arrested another 11 Tamil Tiger-related suspects in the New York City region. And in Baltimore, following a multi-agency investigation, a pair of Indonesian men pled guilty and were sentenced recently for working with others to export surface to air missiles, state-of-the-art firearms, machine guns, and night vision goggles to the Tigers in Sri Lanka.

You can help by being careful with your donations. Like other terrorists, the Tigers have raised funds under a variety of cover organizations, often by posing as charities. A great deal of money, for example, was raised for the Tigers following the 2004 tsunami that devastated Sri Lanka and many other countries.

- FBI (USA)


- தமிழில் யாழிணையம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 3:42 PM | 6மறுமொழிகள் | Back to Main

Wednesday, January 09, 2008

இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.



இந்துக்களின் வைமானிக்கா சாஸ்திரப்படி அமைந்த அடக்குமாடி விமானப் பறப்புக்கான முன்னோடிச் சிந்தனை வரைபடத்தில்.

விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்-

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார்.



நவகால பறப்புப் பொறியியலின் கீழ் வடிவமைக்கப்பட்ட இரட்டைத் தட்டு போக்குவரத்து விமானம் A-380.

உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவுகணைகள் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும் கூட தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மிகப்பழைய காலம் முதலே இவை பற்றி குறிப்புக்கள் காணப்படுவதோடு அவற்றின் அமைப்பு முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் நம் மூதாதையர்களான இந்துக்களா? என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்து

ரிக்வேதம். இராமாயணம். மகாபாரதம். சமரங்கன சூத்திரா. வைமானிக சாஸ்திரம் எனப்பழைய நூல்களில் விமானம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. இவை வெறும் கற்பனையில் உருவானவை என்றோ மூடநம்பிக்கையை விதைக்கின்ற புராண இதிகாசங்கள் என்றோ நம்மால் அப்படியே ஒதுக்கி விடவும் முடியவில்லை.

ரிக் வேதமானது நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது. இதில் போர்க்கடவுளான இந்திரன் விமானரதத்தில் பறந்து வந்து அசுரர்கள் மீது போர் நடத்தியதாகவும் மயன் இவ் வானவூர்தியை ஓட்டியதாகவும் தகவல்கள் உள்ளன அத்துடன் வருணன் போன்ற தேவர்கள் மிகச்சிறந்த வானவ+ர்தியில் வானவெளியில் சென்றதாகவும் புஷன் என்பவன் மிகச்சிறந்த ஓட்டியாக திகழ்ந்தான். என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது கற்பனையில் உருவானது எனக்கூறினாலும் வானில் பறப்பது சாத்தியமே எனக்கூறியதிலிருந்து விமானத்தின் முன்னோடிகளாக எமது இந்துக்கள் திகழ்ந்தனர் எனக்கருதவும் இடமுண்டு.

அடுத்து இராமாயண காலத்தில் இராவணன் என்னும் தமிழ் மன்னன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும். மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும். குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராவணன் கைப்பற்றி அதில் அவன் விண்வெளி முதல் கொண்டு பல உலகங்களையும் சுற்றி வந்தான் எனவும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது வால்மீகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இவற்றை ஆதாரப்படுத்துவது போல் இலங்கையிலே நுவரேலியா என்னும் மாவட்டத்திலே இராவணன் என்னும் மாமன்னன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End ) என்று அழைக்கப்படும் இடம் நோக்கி கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் “ குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம் இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடுபாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்டஇரு பிரதேசங்கள் உண்டு. இது இராவணன் பயன் படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று. இதை உறுதிப் படுத்துவது போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான். என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடுபாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும். அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. என்று தனது நூலில் கூறியுள்ளார். இதுவும் அவரின் கற்பனை என்று கூடக் கூறலாம்.

இக்கருத்துக் கூட கற்பனை என்று மட்டுமே நம்மால் எண்ண முடிகின்றது. உன்மையில் விஞ்ஞானக் கருவிகள் இருக்க முடியாத அந்தக்காலத்தில் ஆகாயத்தில் விமானங்கள் மூலம் பறப்பது பற்றியும் பல மைல்கள் ஏவுகணைகள் போல நெடுந்தூரம் தாண்டிச் சென்று தாக்கக் கூடிய அஸ்திரங்கள் பற்றியும் எப்படி அவர்களால் கற்பனை கூடச் செய்ய முடிந்தது. என்று நாம் சற்று நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவும் எம் இந்துக்களான பழந்தமிழர் விமானத்தின் முன்னோடிகள் தானா ஆராயவும் தலைப்பட்டவர்களாக உள்ளோம். அத்துடன் மயனால் எழுதப்பட்ட மயன் மதம் என்னும் நூலிலும் அதன் விளக்க உரை காட்டும் நூலிலும் வானவூர்தியைப் பற்றியும் அவைகளின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரங்கன சூத்திரா 11ம் நூற்றாண்டில் “இராமச்சந்திர தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது என்பார்கள் இதில் வானவெளிக்கப்பல்கள் எப்படிச் செலுத்தப்பட்டன. அதன் அமைப்பு முறை. என்பன பற்றி விரிவாகக்கூறுகின்றன. அதில் மூன்று விதங்களில் வான்வெளிக் கப்பல்களைச் செலுத்த முடியும் என்கிறது.

1. கீழிலிருந்து(பூமியிலிருந்து) விண்ணை நோக்கிப் பறப்பது.

2. வானவெளியில் பல திசைகளில் பறப்பது.

3. மேலிருந்து (விண்ணிலிருந்து) கீழே இறங்குவது. (பூமி நோக்கி வருதல்)

சில வான்வெளிக் கப்பல்களில் சூரியமண்டலம். மற்றும் நட்சத்திரங்கள் வரை சென்றுவர முடியும் என்றும் இவை மிக வேகமாகச் செல்லக்கூடியவை. அத்துடன் அவை பூமியிலிருந்து பறக்கும் போது அதன் ஒலி புவியில் உள்ளவர்களுக்கு மிக மெல்லிதாகவே கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வான்வெளி விமானங்கள் விண்வெளியில் ஏவப்படும் போர்க்கருவிகள் பற்றியெல்லாம் கூறப்பட்டாலும் கூட இதில் சில விடயங்கள் இருந்திருக்கலாம் என்று கருதலாமே தவிர. அவை இருந்தன. என்று கூறுவதற்கு புராண இதிகாசங்கள் ஆதாரமாகிவிடாது. அத்துடன் இதில் வரும் பாத்திரங்கள் கடவுளாகவும் அவதாரங்களாகவும் இருப்பதால் அவர்களால் மனிதனால் நடாத்தமுடியாத அற்புதங்களை நிகழ்த்தினார்கள் எனச்சொல்லலாம். நம்முன்னோர்கள் கர்ன பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதைகளை காவியமாக வடித்தனர் இருந்த போதும் அந்தக்காவியங்களில் கற்பனை இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. இருந்தபோதும் அந்தக்கால மனிதருக்கு விமானம் பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பட்டது வியப்பானதே.

அடுத்து வைமானிகா சாஸ்திரம் எனும் நூல் “பரத்துவாஜரால் எழுதப்பட்டு இப்போதுள்ள சமஸ்கிருத வடிவில் சுப்புராய சாஸ்திரியால் உருவாக்கப்பட்டது. எனினும் இதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் இதனை “பறக்கும் சாஸ்திரம் பற்றிய விஞ்ஞானம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதில் உள்ள கருத்துக்கள் பழங்கால விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டு நவீனகால விஞ்ஞான அறிவையும் மிஞ்சி நிற்கின்றது.

விமானம் என்றால் என்ன என வைமானிகா சாஸ்திரம் இலக்கணம் கூறும் போது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லும் கருவியே விமானம் என்கிறது. விமானத்தில் 32 சூட்சுமங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியதுடன் விமான அமைப்பு. விமானம் பறப்பது (ஏறுவது). இறக்கும் போது விமானத்தின் கட்டப்பாடு. எனும் 3 தலைப்புக்களில் இந்த 32 சூட்சுமங்களும் அடக்குகின்றன.

அத்துடன் இதில் (வைமானிகா சாஸ்திரம்) விமான ஓட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. விமானத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள். விஷவாயுக்கள். இறக்கைகளை நீட்டுவதும் மடக்குவதும். பருவ நிலைகளை உணர்த்தும் அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்துதல். விமான ஓட்டி அணிய வேண்டிய உடை. உணவுப்பழக்க வழக்கம். விமானம் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகம். என்பன பற்றியெல்லாம் விரிவாகக் கூறுகின்றது.

குறிப்பாக விமானம் செய்யப்பயன்படும் உலோகம் பற்றிக் கூறும் போது வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் உலோகமே உகந்தது எனக் கூறுகிறது. அத்துடன் விமானம் செய்யப் பயன்படும் உலோகங்களின் வகைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விமானத்தில் ஏழுவகையான கண்ணாடிகளும் லென்சுகளும் பொருத்தப்பட வேண்டும் இந்தலென்சுகள் ஆயுதங்களைப் பிரயோகிக்க உதவியதாகவும் இந்த வைமானிகா சாஸ்திரம் கூறுகின்றது.

அத்துடன் எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்சுகளைப் பயன்படுத்த வேண்டும். என்றும் சூரிய ஒளியில் மின்சத்தியைப்பெற்று அதன் மூலம் எதிரி விமானிகளை அழிக்கும் முறைகளையும் கூறிப்பிட்டுள்ளது.

இது நவீன விமானத்தின் லேசர் தொழில் நுட்பத்தையும் விஞ்சி நிற்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் எம் மூதாதையர்களா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

மேலும் ஏழு மோட்டார்கள் மூலம் இவ்விமானங்களை இயக்க சக்தி கிடைப்பதாகவும். சூரியசக்தி. இரசாயண சக்தி. மின்சக்தி. என்பவற்றின் மூலம் விமானம் முன்னோக்கி செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பறப்புக்களை மேற்கொண்டதாகவும் இதில் பெரும்பாலும் சூரியஒளியே பயன்படுத்தப்பட்டது. எனும் தகவலும் (வைமானிகா சாஸ்திரத்தில்) உள்ளது.

இந்தத்தகவல் நமக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. அல்லவா!. அத்துடன் இதில் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமானவகைகள் இருந்ததாகக் கூறுகின்றது. அதில் ருக்மவிமானம், சுந்தவிமானம், ஆகியன சந்திர மண்டலத்திற்குச் சென்ற அப்போலோ விண்கலத்தை போன்ற அமைப்புடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிபுர விமானம் தரையிலும் நீரிலும் செல்லக்கூடியது. இதன் வேகம் குறைவானது. என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சகுன விமானமானது நம்முடைய நவீன விமானத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடைப்பட்ட அமைப்பைக்கொண்டது. இந்த விமானம் மூலம் எந்தக் கிரகத்திற்கும் சென்றுவர முடியும். என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இது வெறும் கற்பனையில் உருவான நூல் (வைமானிகா சாஸ்திரம்) என்று கூறமுடியாதுள்ளது. எனினும் அவற்றை கற்பனை எனக் கூறினாலும் அதில் உள்ள விமானம் பற்றி வியத்தகு நவீன தொழில் நுணுக்கங்கள் பற்றி பழங்கால மனிதன் ஒருவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பானதே.

சங்க இலக்கியமான புறநானூறு மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் வானவூர்தி பற்றிய கருத்து காணப்படுகிறது. பெருங்கதை என்னும் பழந்தமிழ்க் காவியத்தில் வானவூர்தி வடிவமும் அதை இயக்கும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சீவகசிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது நமக்கு வியப்பினை ஏற்படுத்துகிறது.

அதன் பொறியினை வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ காண்பவர் மயிர்சிலிர்க்கும் வகையில் தரையில் இறங்கச்செய்யவோ முடியும் என்கின்றது அந்நூல்.

இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயிற்பொறி விமானத்தை விட எல்லாவகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர். மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றிச்சித்தரிக்கப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்திலும் வானவூர்தி பற்றிய செய்திகள் காணப்படுகின்றது. சங்கஇலக்கியமான புறநானூற்றில் வலவன் ஏவா வான ஊர்தி (புறம் -27. 8)

என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான். என்கின்ற கருத்து நம் தலையைச் சுற்ற வைக்கின்றது. விமான ஓட்டியை வலவன் எனஅழைக்கின்றது புறநானூறு. இது நிச்சயமாக கற்பனையில் உருவான கதை என கூற முடியாது.

புறநானூற்றுத்தமிழன் உண்மையில் நமக்கு முன்னோடிகளே! அந்த முன்னோட்டத்தை இன்றைய தமிழராகிய நாம் உணரவில்லை மாறாக தமிழை மறக்கவே முனைவது கவலையையே தருகின்றது. ஒரு காலத்தில் கற்பனையாக இருப்பது பிறிதொரு காலத்தில் நிஜமாகி விடுவதுண்டு உதாரணமாக ஜூல்வொர்னி என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உலகைச்சுற்றிவர எண்பது நாட்கள்.

எனும் கற்பனை நூலில் நீருக்கடியில் செல்லும் கப்பல்கள். சந்திர மண்டலத்திற்கு வான்வெளிக்கப்பல்களின் மூலம் பயணம் செய்வது பற்றியெல்லாம் எழுதியிருந்தார் ஆங்கிலத்தில் விமானப் பயணம் பற்றி எழுந்த நூல்களில் இதுவே முக்கியமானதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் எழுந்த நூல்கள் எல்லாம் பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பின்னரே எழுந்தது எனலாம். விண்ணியல் பற்றிய வரலாற்றை இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதஇனம் அறிந்திருந்தது. ஆனால் இது எங்கே அறிமுகமானது எனத்தெரியவில்லை. தமிழில் மட்டுமல்ல வேறு மொழிகளிலும் இவைபற்றிய அறிவுகாணப்பட்டது.

1232 களில் சீனத்தார்த்தாரி இனத்தவர்கள் ராக்கட்கள் பயன்படுத்தியதற்கான வரலாற்றுச்சான்றாக மொங்கோலிய அரசனான ஜெங்கிஸ்கானின் மகனான ஒக்டாயின் தலமையின்கீழ் மொங்கோலியர்கள் சீனத் தார்த்தாரியர்களின் காய்பெங்பூ நகரைத்தாக்கியபோது சீனர்கள் தமது நகரைக்காக்க ராக்கட்களை பயன்படுத்தினர். என்பதிலிருந்து அவர்கள் வானியல் பற்றி அறிந்திருந்தனர். என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இது பிற்பட்ட காலத்திலேயே இதை இவர்கள் அறிந்திருந்தனர் எனவே விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் நிச்சயமாக இந்துக்களாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் கி.பி.1280ல் ஹசன் அல்ரமா என்பவரால் அரபு மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதி ஒன்றில் ராக்கட்களை அமைப்பது விண்வெளியில் பயணத்தை மேற்கொள்வது அவற்றை எப்படி அமைப்பது வெடிமருந்து தயாரிப்பது என்பதுபற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கெதிராக 1780இல் இளவரசன் ஹைதர்அலிகான் ராக்கட் தாக்குதல் செய்து ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்தினான் என்றுஒரு குறிப்பும் உண்டு.

இவையும் பிற்பட்ட காலத்தில் எழுந்தவைகளே எனலாம். அத்துடன் கிறிஸ்துவின் காலத்திலும் வானதேவதைகள் பற்றிக் குறிப்பிட்டாலும் அதற்கு முன்னரே இந்து இலக்கியங்களில் விமானம் பற்றிய சிந்தனை காணப்படுகிறது.

சீன. மற்றும் இலத்தீன் மொழிகளில் விமானம் பற்றிய செய்திகள் அந்நூல்களில் காணப்பட்டாலும் அவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்தவைகளே! எனலாம் ஆகவே இந்துதர்மத்தைக் கூறுகின்ற புராணங்கள். இதிகாசங்கள் காப்பியங்கள். ஆகியவற்றில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விமானம் பற்றிய சிந்தனை இருந்திருக்கின்றது.

இதிலிருந்து விமானத்தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது. இவை கற்பனைக்கதை எனக் கூறினாலும் இதிலுள்ள விமானத் தொழில்நுட்பம் வியப்புக்குரியதே.

மூலம் : சூரியன். கொம்

படங்கள் : en.wikipedia.org

மூலத்துக்கான இணைப்பு இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 1:35 PM | 8மறுமொழிகள் | Back to Main